Sunday, January 31, 2010

எழுத்து

எழுதிய எழுத்துகள் வலியை போக்கும்
எழுதாத எழுத்துகள் வலிமையை தாக்கும்
எழுதிப்பார் உன் வலியை
அது உன் குருதியின் சூட்டை தணிக்கும்
வடித்து பார் உன் காதலை
அது உன் மன ஊட்ட வேகத்தை ரெட்டிப்பாக்கும்
எழுதும் எழுத்தில் அல்ல அதன் ஆற்றல்
அது பதியும் வடுவினில் தான்
எழுத்து வெறும் காகித கிறுக்கல் அல்ல
அது வலிகளின் வழி
பேச மொழிகளின் துளி
எழுதிப்பார்



Saturday, January 30, 2010

குழந்தையாய் இருந்திருந்தால்

குழந்தையாய் இருந்திருந்தால்
குட்டையை பார்த்தால்
குதித்து விளையாடி இருக்கலாம்
குறிபார்த்து பக்கத்துக்கு வீட்டு
கண்ணாடி ஜன்னலை உடைத்து இருக்கலாம்
உருகி ஓடும் ஐஸ் குச்சியை
நுனி நாக்கால் நான்றாக உறிஞ்சி சுவைத்திருக்கலாம்
அடித்தாலும் அம்மா நம்மை அன்பாக அரவணைப்பால்
தடுத்தாலும் தந்தை நம்மோடு ஆசையாய் விளையாடி இருப்பார்
ஆசை தாத அன்பு பாட்டி
அளவிலா முத்ததை அமுதாய் பொழிந்து இருப்பர்
வரப்போவதில்லை அக்கணங்கள் திரும்பி
வலித்தாலும் ஏற்க வேண்டும் இந்நிலையை நாம் விரும்பி

நண்பா உனக்காக

நடக்கத் தெரியாத குழந்தைக்கு
நடை பயிற்றும் தந்தையை
படிக்கப் பழகும் பிள்ளையை
பயிற்று விக்கும் ஆசானாய்
வெற்றி பெறத் துடிக்கும்
வீரனின் தளபதியாய்
உறவாய்
நட்பாய்
நேசமாய்
பாசமாய்
என்னையும் ஒருவனாய்
இறையாண்மைக்கு உரியவனை
உருவாக ஊக்குவித்த
நீ வளம் பல பெற்று
நலமோடு வாழ
உளமார இறைவனை
உருகி நான் வேண்டுகிறேன்

Friday, January 29, 2010

மலரே.....

எனக்கு முன் மலர்ந்தாயோ
ஏன் மலர்ந்தென்னை மறைத்தாயோ
மறைத்ததில் நான் வருத்தவில்லை
நீ மலர்ந்ததிலும் எனக்கு மகிழ்ச்சி இல்லை
மலரே
என் மலரே
நீ மலர்ந்தென்னை மறப்பாயோ என்று
என்னும் நொடி மட்டும் உன் இதழ்
தாங்கும் முட்கள் என் இதயத்தை
துளைக்கிறதே

Thursday, January 28, 2010

கண்மணி

ஏந்தினேன் என் கண்மணியை
கையில் எதோ இலவம் பஞ்சு படர்ந்த ஒரு சுகம்
மகத்தில் ரோஜாபூ இதழ் பட்ட ஒரு சுகம்
அமமல்லிகை முகம் என் மனதில் ஒரு புரியாத சிலிர்ப்பை தந்தது
எட்டி உதிக்கும் என் கண்மணியின் பட்டு பதங்கள்
வழியை தரவில்லை பதிலாக என் மொழியை பறித்தன
பேச துடித்தேன் பேச்சு வரவில்லை
துளிகளால் நிறைந்த என் கண்கள்
வருந்துகிறேன் நான் என் வளர்ந்துவிட்டேன் என்று

இவை

பழகத் தேவை நொடிகள்
பிரியத் தேவை சில அடிகள்
இணையத் தேவை சில வழிகள்
இணைக்கும் நம்மை நம் விழிகள்

யதார்த்தம்

உண்மையில் உண்மையாய் இருப்பின்
உரிமைகள் உண்மையாய் இருக்கும்
உண்மையின் மை தீர்ந்து போனால்
உரிமைகள் ஊமை ஆகி தேயும்

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...