Monday, March 4, 2013

என் மகளின் முதல் ஒலிகள்

என் மகளின் முதல் ஒலிகள்

கேட்டதில் மயங்கின பச்சை கிளிகள்
கிள்ளை மொழி பேசியதில் இப் பிள்ளை
என் சொல்லை சூறையாடியது

சூதறியா சகுனி அவள்
பகடை இல்லா விரல்களினால்
எம்மை பரமபதம் ஆட்டுவிப்பாள்
ஏணி ஏறாமல்
பாம்பில் இறங்கவே மனம் விரும்பும்
அவள் விளையாட்டில் இறுதிவரை இருக்க வேண்டி
இயங்காத கருவிகளும் இசை எழுப்பும் இவள் குரலில்
மயங்காத மனதுகளும் மயங்கிவிடும் இவள் சிரிப்பில்

மண்ணுலகில் வந்துதித்த என் விண்ணுலக தேவதையே
உனை என் கண்களுக்குள் வைத்திருப்பேன்
என் கண்மணியாய் பார்த்திருப்பேன்




ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...