Saturday, October 3, 2020

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில்

பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்   

பல் முளைத்து விடுமாஇல்லை 

பல்ப மிட்டாய் கசந்திடுமா   

மாடு கட்டா ஏறு கொண்டு

மண்ணை உழுத மடயனுக்கு   

மண்ணும் மனம் கனிந்திடுமா

இல்லை மாடு ஓடி வந்திடுமா   

போகும் வழியில் சில நேரம்

பொறுமை நம்மை நீங்கிப் போகும்   

அந்த பொறுமை சற்று குறைந்து விடின்

நம் பெருமையது குறைந்திடுமா   

போகட்டும் விட்டு விடு

வெறும் புகழ் தேடும் கூட்டம் அது   

சிங்கமாய் தன்னை நினைத்து

சினம் காட்டும் ஆடாய் கனைத்து


No comments:

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...