Thursday, April 22, 2010

அது

காலை எழும் நேரம்
கண் விழிக்க மறுக்கிறது
முன்பெல்லாம் மதியவேளை
அடி வயிற்றில் ஓடிய அந்த
வைரமுத்துவின் வார்த்தை உருண்டை
இன்று இதயத்தில் உருளுகிறது
இரவு வேளை இதமாய் என்னை
வருடும் பொது
இமைகள் அதுவாய் இணையும் தாருங்கள்
இன்றெல்லாம் வெறுப்பாகிறது
என் தூக்கம் ஒரு அருவருப்பகிறது
குளிக்கும் போது நான்கு கைகளை
மனம் நினைக்கிறது
நடக்கும் பொது பாத்து விரல்களை
விழிகள் ஏங்குகிறது
ஒருமையாய் இருந்த உள்ளம்
இன்று பன்மையை மாறியதன்
உண்மையான காரணம்
அதுவா ?
தெரியவில்லை ஆனால்
உள்ளம் மகிழ்கிறது
இத் தவிப்பில் நெகிழ்கிறது

Tuesday, April 13, 2010

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

கனவுகள் கை கோர்கட்டும்
கவலைகள் நசிந்து ஓடட்டும்
நினைவுகள் இனிமை ஆகட்டும்
நிஜத்தினில் மகிழ்ச்சி பொங்கட்டும்
நேற்றோடு போனது நம் துன்பமெல்லாம்
காற்றோடு போனது நம் தோல்வி எல்லாம்
சுவாசிப்போம் சந்தோசம் இன்று முதல்
சந்திப்போம் வெற்றியை இவ்வாண்டு முதல்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Monday, April 12, 2010

இறைவன் ?

காகிதத்தில்
எழுதிப் பார்த்தேன் கடவுளை
கல்லிலும் செதுக்கிப் பார்த்தேன்
கடவுளை

நிஜத்தில் நினைத்து பார்த்தேன் கடவுளை
நிஜமாய் வெறுத்து போனேன் கடவுளை
கண் கொடுத்து
ஒளி கொடுத்து
விழிக்குள் உயிர் கொடுத்து
இரு கை கொடுத்து
கால் கொடுத்து
குணம் கொடுத்து
மனம் கொடுத்து
எனை படைத்த இறைவன்
மனம் தன்னில் நிதம் என்னை வதம்
செய்து கொல்கிறான்

குழந்தை நண்பன்

வளர்ந்தவன் தான்

எங்களுள் கலந்தவன் தான்
வந்தான் எங்களுக்குள் ஒருவனாய்

வளர்ந்தான் அன்று முதல் தனி ஒருவனாய்

இருந்தவரை அவன் நிழல் கூட தனியாய் நடந்ததில்லை

இறுதிவரை அவன் நிழல் எங்களை தாண்டி சென்றதில்லை

எங்களுள் இருந்த பொறுமையை சோதித்தவன்

எங்களுள் இருந்த பொறாமையை கொன்று சாதித்தவன்

நண்பனை வந்தவன்

எங்கள் செல்ல குழந்தையாய் மாறினான்

வளர்ந்தவன் தான்

எங்களால் வளர்ந்தவன் தான்

நகர்ந்தவன் தான் இன்று எங்களை விடு நகர்ந்தவன் தான்





ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...