Tuesday, March 30, 2010

அவள்

அவள் அழகு என்னை அடிக்கவில்லை
அவள் பண்பு என்னை படுத்தவில்லை
அவள் பெண்மைக்கு நான் அடிமை இல்லை
ஆனாலும்
இன்று தோன்றுகிறது அவள் இல்லையெனில்
நான் இல்லை
என்ன சொல்வேன் என் நிலை
உறக்கம் வருகிறது
அவள் தானே என் உறக்கத்தின் உள் நோக்கம்
பசி படுத்துகிறது
அவள் நினைவுதானே என் உணவு
வெள்ளை காகிதம் எழுத்துகள் அழகாகிறது
அக் கவிதைகளின் நாயகி அவள் தானே
என் மொழி இனிமையாய் ஒலிக்கிறது
என் பேச்சின் மூலமே அவள் தானே
நிற்கையில்
நடக்கையில்
இருக்கையில்
என்றும் என் இரு கையின் ஈரம்
குறையாமல் பற்றும்
அவள் கரம்
வேண்டும் என்றும்
வேண்டுகிறேன் என்றும்

Sunday, March 14, 2010

மானசி - என் உடன் பிறவா பிறப்பின் பிறக்காத குழந்தை

மானசி
மனதினால் மானுவாகி போனவள்
பிஞ்சு விரல்கள்
கொஞ்சும் விழிகள்
தத்தையாய் தவழ்ந்து
என் நித்திரை பரிப்பவள்

வெள்ளித்திரை அறியாதவள்
சின்னத்திரை பற்றி புரியாதவள்
கணினியை காழ்போடு பார்க்கும்
சின்ன குயில் அவள்
விரல்களால் கிறுக்குவாள்
வியத்தகு ஓவியங்களை
தன்விழிகளால் பேசுவாள்
நயம் மிகு கவிதைகளை
காண்பவர்கள் கண் சிமிட்டாமல்
கண்மணி அவள் புகழ் பாடுவர்
என் கண்ணே மானு
பிறந்தால் நீ என் குழந்தையாய் மட்டும் இரு
உன் குதுகலம் கண்டால் போதும் கண்ணே

என் உள்ளம் உயிர் ரெண்டும் உன் பின்னே ஓடும்

Tuesday, March 2, 2010

அவன்

கண் முன் இல்லை
ஆனால் மனம் முழுவதும்
கால் கடுக்க என்னோடு நடக்கவில்லை
ஆனால்ஒவ்வொரு அடியிலும் அவனும்
அருகே அமர்ந்து உணவருந்தவில்லை
ஆனால் ஒவ்வொரு கவலதிலும் அவன்
அவன் மூச்சின் கற்று என் மேல் படவில்லை
ஆனால் நான் சுவாசிக்கும் மூச்சினிலும் அவன்
என் செய்வேன்
அவனாய் நான் மாறினேனோ
அவன்தான் என்னை மாற்றினானோ
சொல்லத் தெரியவில்லை
ஆனால் சுகமாய் இருக்குது இவ் வலி

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...