Thursday, May 6, 2010

ஊசி முனை
உன் வார்த்தை
உரசியது உரிமையாய்
காற்றுப்பை
என் உள்ளம்
வெடித்ததடிவெறுமையாய்

Wednesday, May 5, 2010

இன்று நான்

இன்று நான்
கல்லடி பட்ட கண்ணாடி
நூல் அறுந்த காத்தாடி
வால் இழந்த பல்லி
வாடிவிழுந்த மல்லிகை
மழை மறைத்த வானவில்
சிறகொடிந்த பறவை
ஆட மறந்த மயில்
பாட மறந்த குயில்
இத்துனை குறிப்புகள்
என்னை குறிக்கும் வண்ணம்
குருகிப்போனேன்
எண்ணங்கள் கருகிப்போனேன்
காகிதத்தில் தீட்டினேன்
கார் வண்ண ஓவியம்
காகிதமே கிழிந்தது
என் ஓவியமும் மறைந்தது
சொல்லத் தெரியவில்லை என் வலி
சொல்லத் தேடுகிறேன் ஒரு வழி
ஆறாத ரணம் அல்ல இந்நிலை
என் கடலினில் ஓயாது அடித்திடும் ஒரு அலை

Tuesday, May 4, 2010

அது இது எது

இரவு இருளவில்லை

விடியலில் வெளிச்சமில்லை

நினைவு நகர வில்லை

என் நிகழ்வோ எதுவுமில்லை

காரணம் அது

வேலையில் நாட்டமில்லை

காலையில் விழிப்பு இல்லை

சோகமாய் கண்ணின் ஓரம்

ஈரமாய் கண்ணீரின் முல்லை

காரணம் இது

இனிப்புகள் இனிக்கவில்லை

என் இரவுகள் முடிவதில்லை

வாழ்வினில் நாட்டம் இல்லை

நான் வாழ்வதில் அர்த்தம் இல்லை

காரணம் அது

இவனது நினைவுகளுக்கும்

இவ்வகை நிகழ்வுகளுக்கும்

இதுவா அதுவா

எதுதான் கரணம்

இது அது எது எல்லாமே

என்ன

காதலா

தோல்வியா

கவலையா

பிரிவா

இழப்பா

உணரத்தான் முடிகிறது

உரைக்க முடியவில்லை


ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...