Friday, August 27, 2010

pen தோழி

என் இனிய pen தோழியே
என் தோழியாய் பின் நின்று
என் வார்த்தையின் வளமை கண்டு
என் மீது உரிமை கொண்டு
என் எழுத்தை செதுக்கி
என் ஆற்றல் பெருக்கி
எனை ஆக்கினாய்
எழுத்தாளனாய்
என் தோழியாய் நீ இருப்பதினும்
என் pen தோழியாய் இருப்பதில்
இறுமாப்பு கொள்கிறேன்
:)

பாவம் முதிர் கன்னிகள்

காதலித்து பார்த்தேன்
காதலில் தோல்வியுற்றும் பார்த்தேன்
களங்கமிலா உள்ளம்
என் மேல் காதல் கொண்டும் பார்த்தேன்
இன்று
கல்யாண சந்தையில் கால் கடுக்க நிறுத்த பட்டேன்
பல் பிடித்து பார்க்கும் சிலபேர்
என் purse பிடித்து பார்க்கும் பலபேர்
நோகா நெஞ்சில் நயவஞ்சகமாய்
வஞ்சகமாய் உல் செலுத்தும் வெகு பேர்
என் சொல்வேன் இச்சந்தை
எனை விற்க என்ன யுக்தி செயகுமோ
பாவம் முதிர் கன்னிகள்

Thursday, August 26, 2010

என்

அன்றோ..
வலித்தது பசித்தது
தவித்தது துடித்தது
இனித்தது கசந்தது
இயற்கையில் என் மனம் லயித்தது
உள்ளத்தின் ஓசைகளை என் உள்ளங்கை அறிந்தது
நெஞ்சத்தின் ஆசைகளை என் நகக்கண்ணும் உணர்ந்தது
இன்றோ.
வழியுமில்லை வலியும்மில்லை
செவி கேட்கும் ஒலிகள் என் செவியோடு மறைந்தது
கவி பாட தூண்டும் எண்ணம் என்னுள் கல்லறை கட்டி புகுந்தது
மாற்றமா இது ஒரு இடை நிலை தோற்றமா
தோணவில்லை

Wednesday, August 25, 2010

குடை மீது கோபம்


துளிகளை அணிகலாக்கி
கார்மேகத்தை உடையாய் கொண்டு
கவர்ச்சியாய் நடனம் ஆடும்
அக் கார்குழல் மழை அழகியின்
உருவத்தை மறைக்கும் இந்த
குடை மீது எனக்கு கோபம்

எழுத சொன்ன இதயத்திற்காய்

இறந்து போன இதயத்தில்
இரு சொட்டு எண்ணெய் விட்டு
இரு மடங்காய் ஒளி கொடுத்தாள்
என் மனம்
மறந்து போன வார்த்தைகளை தன்
அன்பால் கறந்து சேர்த்து கவிதை ஆக்கியவள்
எழுத சொன்னால் என்னை
இயங்கியவற்றை எழுதிய நான்
இன்று இயங்க மறுக்கும் என் இதயத்தை பற்றி எழுத முயல்கிறேன்

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...