Thursday, October 20, 2011

என்ன எழுத ?

இயலாத இதயமும்
இருண்டுள்ள விழிகளும்
சோகமுமாய் கோபமுமாய்
அலைந்திருக்கும் தேகமும்
சூழ்நிலை அறியா சுயநலமும்
வெறுமையும்
வெறுப்பும்
ஒவ்வாமையும்
இங்ஙனம்
உயரதுடிக்காத
ஒன்றுக்கும் உதவாத
ஒரு நோக்கு கொண்டவனின்
விரல் இடுக்கு எழுத்தாணி
எங்கனம் எழுதும்

நடுவில் நான்

அளவில்லா அன்பு
அடைப்பில்லா பாசம்
என்னை அணைத்திருக்கும் காதல்
இவை நடுவில் நான்
குளிர் நடுக்கும் குழந்தையாய்
குரல் அடைத்த குயிலாய்
இறகொடிந்த மயிலாய்
அழுகவும் முடியாமல்
உரக்க உளறவும் இயலாமல்
உள்ளுக்குள் உணருகிறேன் என் வலி
அது என் உறுதியாய் குலைகின்ற உளி

இல்லைகள்

அழகில்லை
அறிவில்லை
பணமில்லை
பதவியில்லை
புகழில்லை
இவ் "இல்லைகள்" அல்ல வாழ்வின் "எல்லைகள்"
நம்பிக்கை
நன்னடத்தை
இன்முகம்
இடி தாங்கும் இதயம்
இவை கொள் அவை துரத்தும் உன் தாழ்வின் "தொல்லைகள்"

Monday, April 11, 2011

உறக்கம்

மெத்தையில் தத்தையாய் தவழ்ந்து சித்தம் அது தளர்ந்து சத்தம் குறைந்து பித்தமாய் இரு கண் மூடியும் வரவில்லை வந்தது என் வேலையின் இடைவேளையில் வழக்கத்தின் மாறாய் இவ்வுறக்கம்

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...