ஊசி முனை
உன் வார்த்தை
உரசியது உரிமையாய்
காற்றுப்பை
என் உள்ளம்
வெடித்ததடிவெறுமையாய்
Thursday, May 6, 2010
Wednesday, May 5, 2010
இன்று நான்
இன்று நான்
கல்லடி பட்ட கண்ணாடி
நூல் அறுந்த காத்தாடி
வால் இழந்த பல்லி
வாடிவிழுந்த மல்லிகை
மழை மறைத்த வானவில்
சிறகொடிந்த பறவை
ஆட மறந்த மயில்
பாட மறந்த குயில்
இத்துனை குறிப்புகள்
என்னை குறிக்கும் வண்ணம்
குருகிப்போனேன்
எண்ணங்கள் கருகிப்போனேன்
காகிதத்தில் தீட்டினேன்
கார் வண்ண ஓவியம்
காகிதமே கிழிந்தது
என் ஓவியமும் மறைந்தது
சொல்லத் தெரியவில்லை என் வலி
சொல்லத் தேடுகிறேன் ஒரு வழி
ஆறாத ரணம் அல்ல இந்நிலை
என் கடலினில் ஓயாது அடித்திடும் ஒரு அலை
கல்லடி பட்ட கண்ணாடி
நூல் அறுந்த காத்தாடி
வால் இழந்த பல்லி
வாடிவிழுந்த மல்லிகை
மழை மறைத்த வானவில்
சிறகொடிந்த பறவை
ஆட மறந்த மயில்
பாட மறந்த குயில்
இத்துனை குறிப்புகள்
என்னை குறிக்கும் வண்ணம்
குருகிப்போனேன்
எண்ணங்கள் கருகிப்போனேன்
காகிதத்தில் தீட்டினேன்
கார் வண்ண ஓவியம்
காகிதமே கிழிந்தது
என் ஓவியமும் மறைந்தது
சொல்லத் தெரியவில்லை என் வலி
சொல்லத் தேடுகிறேன் ஒரு வழி
ஆறாத ரணம் அல்ல இந்நிலை
என் கடலினில் ஓயாது அடித்திடும் ஒரு அலை
Tuesday, May 4, 2010
அது இது எது
இரவு இருளவில்லை
விடியலில் வெளிச்சமில்லை
நினைவு நகர வில்லை
என் நிகழ்வோ எதுவுமில்லை
காரணம் அது
வேலையில் நாட்டமில்லை
காலையில் விழிப்பு இல்லை
சோகமாய் கண்ணின் ஓரம்
ஈரமாய் கண்ணீரின் முல்லை
காரணம் இது
இனிப்புகள் இனிக்கவில்லை
என் இரவுகள் முடிவதில்லை
வாழ்வினில் நாட்டம் இல்லை
நான் வாழ்வதில் அர்த்தம் இல்லை
காரணம் அது
இவனது நினைவுகளுக்கும்
இவ்வகை நிகழ்வுகளுக்கும்
இதுவா அதுவா
எதுதான் கரணம்
இது அது எது எல்லாமே
என்ன
காதலா
தோல்வியா
கவலையா
பிரிவா
இழப்பா
உணரத்தான் முடிகிறது
உரைக்க முடியவில்லை
Subscribe to:
Comments (Atom)
ஆடாய் கனைக்கும் சிங்கம்
பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால் பல் முளைத்து விடுமாஇல்லை பல்ப மிட்டாய் கசந்திடுமா மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...
-
உன் இழப்பு என் இறப்பு என் செய்வேன் என் தோழி இறைவன் கொடுக்கவில்லை இருவர் இணையும் வாரம் இனியும் கிடைக்க போவதில்லை உன் போல் ஒரு குணம் இன்று முத...
-
தமிழ் எந்தன் பேச்சு தமிழே என் மூச்சு என்று வெறும் வார்த்தை பேசி வியாபாரம் செய்யும் விபச்சார தலைவர் பலர் உண்டு இங்கு நம்மை ஆள தேவை ...