நேற்றுவரை நில்லாமல் என்னை
நனைத்து வந்த தூறல் நின்றது
ஆம் அவள் என் விரல் நீங்கி சென்றதால்
உன்னால் துளிர்த்திருந்த என் இதயம்
துவண்டது
நீர் இன்றி வரண்டது
உன் தூறல் ஒலி
கேட்டு உயிர்த்திருத்த செவி
இன்றோ மலர் வலயத்தால் மறைக்கப்பட்டு விட்டது
உன் மழை தந்த ஈரம் பட
நடந்திருந்த பாதங்கள்
நின்றது முழுவதுமாய்
முற்றிலுமாய்
Wednesday, December 22, 2010
Sunday, December 5, 2010
கண்ணழகி
காலைப் பேருந்தில் கண்டேன்அவளை
கோடிக் கண்கள் நடுவில்
இஜ் ஜோடிக் கண்கள்
வலை வீசி பிடித்தன என்னை
கண நேரம் எனை மறந்தேன்
எனை அறியாமல் நான் பறந்தேன்
அவள் விழிகள் பேசிய மொழிகளை
இமை மூடாமல் படித்து நின்றேன்
இருக்கை இல்லையென்றால் இயல்பாய் சாடும் மனம்
இன்று இன்பத்தில் திளைத்தது அவள் அருகில் நின்றதால்
அவள் வேல் விழிகள் என்னைக் கொள்ளாதோ
அவள் விழி வில்கள் அம்புகளை தொடுக்காதோ
இன்னும் ஒரு முறை
இப்போரில் மாட்டி
இன்னுயிரை துயிர்க்க
ஏங்குகிறேன் நான்
கோடிக் கண்கள் நடுவில்
இஜ் ஜோடிக் கண்கள்
வலை வீசி பிடித்தன என்னை
கண நேரம் எனை மறந்தேன்
எனை அறியாமல் நான் பறந்தேன்
அவள் விழிகள் பேசிய மொழிகளை
இமை மூடாமல் படித்து நின்றேன்
இருக்கை இல்லையென்றால் இயல்பாய் சாடும் மனம்
இன்று இன்பத்தில் திளைத்தது அவள் அருகில் நின்றதால்
அவள் வேல் விழிகள் என்னைக் கொள்ளாதோ
அவள் விழி வில்கள் அம்புகளை தொடுக்காதோ
இன்னும் ஒரு முறை
இப்போரில் மாட்டி
இன்னுயிரை துயிர்க்க
ஏங்குகிறேன் நான்
Thursday, December 2, 2010
இன்பம்
இதழோர சிரிப்பும்
இமையோர கண்ணீர் துளிர்ப்பும்
இரண்டரக்கலந்ததில்லை
உன் இரு விழி என்னில்
இரண்டறக் கலந்த கணம்
என் விழிகளில் துளிர்த்தன துளிகள்
என் முகத்திலோ புன்சிரி ஒளிகள்
இதுதான் இன்பமோ
இன்று கண்டுணர்ந்தேன்
இமையோர கண்ணீர் துளிர்ப்பும்
இரண்டரக்கலந்ததில்லை
உன் இரு விழி என்னில்
இரண்டறக் கலந்த கணம்
என் விழிகளில் துளிர்த்தன துளிகள்
என் முகத்திலோ புன்சிரி ஒளிகள்
இதுதான் இன்பமோ
இன்று கண்டுணர்ந்தேன்
Wednesday, December 1, 2010
என் தெரு நாய்கள்
புது வீடு நோக்கி நடந்து வந்தேன் முதல் நாளில்
அத்தெருவின் மூதாதையர்
மேதகு நாய்கள்வரவேற்றன வழக்கம் போல்
இரு நாய்கள் தள்ளி நின்று சிறு நாய்கள் என்னை சுற்றி நின்று
ஓயாமல் குரைத்தன
எனைஓட வைக்கத்தான் நினைத்தன
இதயத்தை கையில் இறுக்கமாய் கொண்டு
அடி மீது அடி வைத்து நடந்து போனேன் புதுப் பெண் போல்
மறுநாள் அதே வேளை
மனதுக்குள் பய உதறல்
துர்கையையும் காளியையும் துணைக்கு அழைத்துக்கொண்டே
மெதுவாக நுழைந்தேன் வீதியில்
அதே நாய்கள்நின்றன
அவற்றின் விழிகள் உருண்டன எனக்கோ
கண்கள் மருண்டன
ஆச்சர்யம்!!!
சத்தமில்லை சலனமில்லை
சிறு பிள்ளையாய் எனை பார்த்துஆட்டின தம் வாலை
நான் கிள்ளி பார்த்தேன் என் தோளை
உணர்ந்தேன்
அவைகொள்ளும் அடையாளம் ஒருமுறையில்
ஆயின் அதை உணரும் பாங்கில்லை நம் நடைமுறையில்
அத்தெருவின் மூதாதையர்
மேதகு நாய்கள்வரவேற்றன வழக்கம் போல்
இரு நாய்கள் தள்ளி நின்று சிறு நாய்கள் என்னை சுற்றி நின்று
ஓயாமல் குரைத்தன
எனைஓட வைக்கத்தான் நினைத்தன
இதயத்தை கையில் இறுக்கமாய் கொண்டு
அடி மீது அடி வைத்து நடந்து போனேன் புதுப் பெண் போல்
மறுநாள் அதே வேளை
மனதுக்குள் பய உதறல்
துர்கையையும் காளியையும் துணைக்கு அழைத்துக்கொண்டே
மெதுவாக நுழைந்தேன் வீதியில்
அதே நாய்கள்நின்றன
அவற்றின் விழிகள் உருண்டன எனக்கோ
கண்கள் மருண்டன
ஆச்சர்யம்!!!
சத்தமில்லை சலனமில்லை
சிறு பிள்ளையாய் எனை பார்த்துஆட்டின தம் வாலை
நான் கிள்ளி பார்த்தேன் என் தோளை
உணர்ந்தேன்
அவைகொள்ளும் அடையாளம் ஒருமுறையில்
ஆயின் அதை உணரும் பாங்கில்லை நம் நடைமுறையில்
Subscribe to:
Comments (Atom)
ஆடாய் கனைக்கும் சிங்கம்
பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால் பல் முளைத்து விடுமாஇல்லை பல்ப மிட்டாய் கசந்திடுமா மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...
-
உன் இழப்பு என் இறப்பு என் செய்வேன் என் தோழி இறைவன் கொடுக்கவில்லை இருவர் இணையும் வாரம் இனியும் கிடைக்க போவதில்லை உன் போல் ஒரு குணம் இன்று முத...
-
தமிழ் எந்தன் பேச்சு தமிழே என் மூச்சு என்று வெறும் வார்த்தை பேசி வியாபாரம் செய்யும் விபச்சார தலைவர் பலர் உண்டு இங்கு நம்மை ஆள தேவை ...