Friday, August 27, 2010

பாவம் முதிர் கன்னிகள்

காதலித்து பார்த்தேன்
காதலில் தோல்வியுற்றும் பார்த்தேன்
களங்கமிலா உள்ளம்
என் மேல் காதல் கொண்டும் பார்த்தேன்
இன்று
கல்யாண சந்தையில் கால் கடுக்க நிறுத்த பட்டேன்
பல் பிடித்து பார்க்கும் சிலபேர்
என் purse பிடித்து பார்க்கும் பலபேர்
நோகா நெஞ்சில் நயவஞ்சகமாய்
வஞ்சகமாய் உல் செலுத்தும் வெகு பேர்
என் சொல்வேன் இச்சந்தை
எனை விற்க என்ன யுக்தி செயகுமோ
பாவம் முதிர் கன்னிகள்

Thursday, August 26, 2010

என்

அன்றோ..
வலித்தது பசித்தது
தவித்தது துடித்தது
இனித்தது கசந்தது
இயற்கையில் என் மனம் லயித்தது
உள்ளத்தின் ஓசைகளை என் உள்ளங்கை அறிந்தது
நெஞ்சத்தின் ஆசைகளை என் நகக்கண்ணும் உணர்ந்தது
இன்றோ.
வழியுமில்லை வலியும்மில்லை
செவி கேட்கும் ஒலிகள் என் செவியோடு மறைந்தது
கவி பாட தூண்டும் எண்ணம் என்னுள் கல்லறை கட்டி புகுந்தது
மாற்றமா இது ஒரு இடை நிலை தோற்றமா
தோணவில்லை

Wednesday, August 25, 2010

குடை மீது கோபம்


துளிகளை அணிகலாக்கி
கார்மேகத்தை உடையாய் கொண்டு
கவர்ச்சியாய் நடனம் ஆடும்
அக் கார்குழல் மழை அழகியின்
உருவத்தை மறைக்கும் இந்த
குடை மீது எனக்கு கோபம்

எழுத சொன்ன இதயத்திற்காய்

இறந்து போன இதயத்தில்
இரு சொட்டு எண்ணெய் விட்டு
இரு மடங்காய் ஒளி கொடுத்தாள்
என் மனம்
மறந்து போன வார்த்தைகளை தன்
அன்பால் கறந்து சேர்த்து கவிதை ஆக்கியவள்
எழுத சொன்னால் என்னை
இயங்கியவற்றை எழுதிய நான்
இன்று இயங்க மறுக்கும் என் இதயத்தை பற்றி எழுத முயல்கிறேன்

Sunday, June 20, 2010

தமிழ் பெண்ணின் அழகு

வகுடெடுத்து வரியா வளப்பான கருங்கூந்தல் அதில்
வண்ணமில்லா வெள்ளை மலர்கள் வீற்றிருந்தது அழகாக
படிவாய் படர்ந்த அந்த பச்சை வண்ண மேலாடை
படபடக்கும் பட்டாம் பூச்சி இமைகள்
இனிக்கின்ற இதழும்
கேள்வி குறி போன்ற செவியும்
அட
வள்ளுவனாய் பிறப்பிருந்தால் இவளை இருவரியில் வடித்திருப்பேன்
பாரதியை இருந்திருந்தால் அழகு தமிழ் இசையாய் இசைத்திருபேன்

உறக்கத்திற்கு இல்லாமல் போன இரக்கம்

உறக்கதிருக்கு இல்லாமல் போனது என் மேல் இரக்கம்
ஏன் இந்த அரக்க குணம் ?
பிறக்கத்தான் தெரிந்தது வழி
பிறக்கும் தான் புரிந்தது
வருத்தமா இல்லை வாழ்வில்
திருத்தமா தெரியவில்லை
நினைத்து பார்த்தேன்
கிறக்கம் தன வருகிறது

Saturday, June 19, 2010

இன்பம்

தனியே நின்றிருந்தேன்
புல் வெளியின் விளிம்பு
நதிக்கரை துவக்கம்
பாதம் புல்லின் மேல்
விரலோரம் நதி நீர் ஈரம்
இமை உயர உயர்ந்தது
விழி வியப்பில் விரிந்தது
இயற்கையின் இன்பம் எத்துனை
புல் தரும் பாதத்தில் சுகம்
நதி கொடுக்கும் இதம் நுனி நரம்பில் ஒரு ரகம்
அந்நொடி
உணர்ந்தேன்
இன்பத்தின் உச்சம்

inbam

தனியே நின்றிருந்தேன்
புல் வெளியின் விளிம்பு
நதிக்கரை துவக்கம்
பாதம் புல்லின் மேல்
விரலோரம் நதி நீர் ஈரம்
இமை உயர உயர்ந்தது
விழி வியப்பில் விரிந்தது
இயற்கையின் இன்பம் எத்துனை
புல் தரும் பாதத்தில் சுகம்
நாடி கொடுக்கும் இதம் நுனி நரம்பில் ஒரு ரகம்
அந்நொடி
உணர்ந்தேன்
இன்பத்தின் உச்சம்

Thursday, May 6, 2010

ஊசி முனை
உன் வார்த்தை
உரசியது உரிமையாய்
காற்றுப்பை
என் உள்ளம்
வெடித்ததடிவெறுமையாய்

Wednesday, May 5, 2010

இன்று நான்

இன்று நான்
கல்லடி பட்ட கண்ணாடி
நூல் அறுந்த காத்தாடி
வால் இழந்த பல்லி
வாடிவிழுந்த மல்லிகை
மழை மறைத்த வானவில்
சிறகொடிந்த பறவை
ஆட மறந்த மயில்
பாட மறந்த குயில்
இத்துனை குறிப்புகள்
என்னை குறிக்கும் வண்ணம்
குருகிப்போனேன்
எண்ணங்கள் கருகிப்போனேன்
காகிதத்தில் தீட்டினேன்
கார் வண்ண ஓவியம்
காகிதமே கிழிந்தது
என் ஓவியமும் மறைந்தது
சொல்லத் தெரியவில்லை என் வலி
சொல்லத் தேடுகிறேன் ஒரு வழி
ஆறாத ரணம் அல்ல இந்நிலை
என் கடலினில் ஓயாது அடித்திடும் ஒரு அலை

Tuesday, May 4, 2010

அது இது எது

இரவு இருளவில்லை

விடியலில் வெளிச்சமில்லை

நினைவு நகர வில்லை

என் நிகழ்வோ எதுவுமில்லை

காரணம் அது

வேலையில் நாட்டமில்லை

காலையில் விழிப்பு இல்லை

சோகமாய் கண்ணின் ஓரம்

ஈரமாய் கண்ணீரின் முல்லை

காரணம் இது

இனிப்புகள் இனிக்கவில்லை

என் இரவுகள் முடிவதில்லை

வாழ்வினில் நாட்டம் இல்லை

நான் வாழ்வதில் அர்த்தம் இல்லை

காரணம் அது

இவனது நினைவுகளுக்கும்

இவ்வகை நிகழ்வுகளுக்கும்

இதுவா அதுவா

எதுதான் கரணம்

இது அது எது எல்லாமே

என்ன

காதலா

தோல்வியா

கவலையா

பிரிவா

இழப்பா

உணரத்தான் முடிகிறது

உரைக்க முடியவில்லை


ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...