Monday, November 29, 2010

அவள் பிரிவால்.......

இருண்டது என் இதயம்
இயங்க முரண்டது அது நிதமும்
அவள் நினைவில் துடித்திருந்தது
அவள் பெயரால் உயிர்த்திருந்தது
என் விரல்களை விடு அவள் நீகும் நேரம்
என் கண்ணோரம் துளிர்த்தது
ஒரு ஈரம்

**********************************************

உன் கூர் மூக்கும்
குறு குறு பார்வையும் அழகாய்
குவிந்த இதழ்களும்
கார் மேகம் ஒத்த கூந்தலும்
எனதில்லை என்று எண்ணும் நேரம்
இனம் புரியா இதய வலி கண்ணே
நீ வந்து சென்ற இதயம்
பாலைவனமாய் வரண்டது
தடம் தெரியா வழி சென்ற நீ
இன்னும் வசிக்கிறாய் என் விழிகளில்

Saturday, October 23, 2010

வலிக்கத்தான் வலிகள்

புத்திக்கு தெரிவதெல்லாம்
நம் மனதிற்கு புரிவதில்லை
சரியே
ஆம்
இழந்தாலும் விடுவதில்லை
முடிந்தாலும் நிறுத்தவில்லை
நினைவுகளால் வதைப்பதும்
இறந்த நிஜங்களை மீண்டும் விதைப்பதும்
சுகமான வலி என்று கவிஞர் கூறினும்
வலிக்கிறதே வாழ்வே சலிக்கிறதே

Friday, August 27, 2010

pen தோழி

என் இனிய pen தோழியே
என் தோழியாய் பின் நின்று
என் வார்த்தையின் வளமை கண்டு
என் மீது உரிமை கொண்டு
என் எழுத்தை செதுக்கி
என் ஆற்றல் பெருக்கி
எனை ஆக்கினாய்
எழுத்தாளனாய்
என் தோழியாய் நீ இருப்பதினும்
என் pen தோழியாய் இருப்பதில்
இறுமாப்பு கொள்கிறேன்
:)

பாவம் முதிர் கன்னிகள்

காதலித்து பார்த்தேன்
காதலில் தோல்வியுற்றும் பார்த்தேன்
களங்கமிலா உள்ளம்
என் மேல் காதல் கொண்டும் பார்த்தேன்
இன்று
கல்யாண சந்தையில் கால் கடுக்க நிறுத்த பட்டேன்
பல் பிடித்து பார்க்கும் சிலபேர்
என் purse பிடித்து பார்க்கும் பலபேர்
நோகா நெஞ்சில் நயவஞ்சகமாய்
வஞ்சகமாய் உல் செலுத்தும் வெகு பேர்
என் சொல்வேன் இச்சந்தை
எனை விற்க என்ன யுக்தி செயகுமோ
பாவம் முதிர் கன்னிகள்

Thursday, August 26, 2010

என்

அன்றோ..
வலித்தது பசித்தது
தவித்தது துடித்தது
இனித்தது கசந்தது
இயற்கையில் என் மனம் லயித்தது
உள்ளத்தின் ஓசைகளை என் உள்ளங்கை அறிந்தது
நெஞ்சத்தின் ஆசைகளை என் நகக்கண்ணும் உணர்ந்தது
இன்றோ.
வழியுமில்லை வலியும்மில்லை
செவி கேட்கும் ஒலிகள் என் செவியோடு மறைந்தது
கவி பாட தூண்டும் எண்ணம் என்னுள் கல்லறை கட்டி புகுந்தது
மாற்றமா இது ஒரு இடை நிலை தோற்றமா
தோணவில்லை

Wednesday, August 25, 2010

குடை மீது கோபம்


துளிகளை அணிகலாக்கி
கார்மேகத்தை உடையாய் கொண்டு
கவர்ச்சியாய் நடனம் ஆடும்
அக் கார்குழல் மழை அழகியின்
உருவத்தை மறைக்கும் இந்த
குடை மீது எனக்கு கோபம்

எழுத சொன்ன இதயத்திற்காய்

இறந்து போன இதயத்தில்
இரு சொட்டு எண்ணெய் விட்டு
இரு மடங்காய் ஒளி கொடுத்தாள்
என் மனம்
மறந்து போன வார்த்தைகளை தன்
அன்பால் கறந்து சேர்த்து கவிதை ஆக்கியவள்
எழுத சொன்னால் என்னை
இயங்கியவற்றை எழுதிய நான்
இன்று இயங்க மறுக்கும் என் இதயத்தை பற்றி எழுத முயல்கிறேன்

Sunday, June 20, 2010

தமிழ் பெண்ணின் அழகு

வகுடெடுத்து வரியா வளப்பான கருங்கூந்தல் அதில்
வண்ணமில்லா வெள்ளை மலர்கள் வீற்றிருந்தது அழகாக
படிவாய் படர்ந்த அந்த பச்சை வண்ண மேலாடை
படபடக்கும் பட்டாம் பூச்சி இமைகள்
இனிக்கின்ற இதழும்
கேள்வி குறி போன்ற செவியும்
அட
வள்ளுவனாய் பிறப்பிருந்தால் இவளை இருவரியில் வடித்திருப்பேன்
பாரதியை இருந்திருந்தால் அழகு தமிழ் இசையாய் இசைத்திருபேன்

உறக்கத்திற்கு இல்லாமல் போன இரக்கம்

உறக்கதிருக்கு இல்லாமல் போனது என் மேல் இரக்கம்
ஏன் இந்த அரக்க குணம் ?
பிறக்கத்தான் தெரிந்தது வழி
பிறக்கும் தான் புரிந்தது
வருத்தமா இல்லை வாழ்வில்
திருத்தமா தெரியவில்லை
நினைத்து பார்த்தேன்
கிறக்கம் தன வருகிறது

Saturday, June 19, 2010

இன்பம்

தனியே நின்றிருந்தேன்
புல் வெளியின் விளிம்பு
நதிக்கரை துவக்கம்
பாதம் புல்லின் மேல்
விரலோரம் நதி நீர் ஈரம்
இமை உயர உயர்ந்தது
விழி வியப்பில் விரிந்தது
இயற்கையின் இன்பம் எத்துனை
புல் தரும் பாதத்தில் சுகம்
நதி கொடுக்கும் இதம் நுனி நரம்பில் ஒரு ரகம்
அந்நொடி
உணர்ந்தேன்
இன்பத்தின் உச்சம்

inbam

தனியே நின்றிருந்தேன்
புல் வெளியின் விளிம்பு
நதிக்கரை துவக்கம்
பாதம் புல்லின் மேல்
விரலோரம் நதி நீர் ஈரம்
இமை உயர உயர்ந்தது
விழி வியப்பில் விரிந்தது
இயற்கையின் இன்பம் எத்துனை
புல் தரும் பாதத்தில் சுகம்
நாடி கொடுக்கும் இதம் நுனி நரம்பில் ஒரு ரகம்
அந்நொடி
உணர்ந்தேன்
இன்பத்தின் உச்சம்

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...