Thursday, May 6, 2010

ஊசி முனை
உன் வார்த்தை
உரசியது உரிமையாய்
காற்றுப்பை
என் உள்ளம்
வெடித்ததடிவெறுமையாய்

Wednesday, May 5, 2010

இன்று நான்

இன்று நான்
கல்லடி பட்ட கண்ணாடி
நூல் அறுந்த காத்தாடி
வால் இழந்த பல்லி
வாடிவிழுந்த மல்லிகை
மழை மறைத்த வானவில்
சிறகொடிந்த பறவை
ஆட மறந்த மயில்
பாட மறந்த குயில்
இத்துனை குறிப்புகள்
என்னை குறிக்கும் வண்ணம்
குருகிப்போனேன்
எண்ணங்கள் கருகிப்போனேன்
காகிதத்தில் தீட்டினேன்
கார் வண்ண ஓவியம்
காகிதமே கிழிந்தது
என் ஓவியமும் மறைந்தது
சொல்லத் தெரியவில்லை என் வலி
சொல்லத் தேடுகிறேன் ஒரு வழி
ஆறாத ரணம் அல்ல இந்நிலை
என் கடலினில் ஓயாது அடித்திடும் ஒரு அலை

Tuesday, May 4, 2010

அது இது எது

இரவு இருளவில்லை

விடியலில் வெளிச்சமில்லை

நினைவு நகர வில்லை

என் நிகழ்வோ எதுவுமில்லை

காரணம் அது

வேலையில் நாட்டமில்லை

காலையில் விழிப்பு இல்லை

சோகமாய் கண்ணின் ஓரம்

ஈரமாய் கண்ணீரின் முல்லை

காரணம் இது

இனிப்புகள் இனிக்கவில்லை

என் இரவுகள் முடிவதில்லை

வாழ்வினில் நாட்டம் இல்லை

நான் வாழ்வதில் அர்த்தம் இல்லை

காரணம் அது

இவனது நினைவுகளுக்கும்

இவ்வகை நிகழ்வுகளுக்கும்

இதுவா அதுவா

எதுதான் கரணம்

இது அது எது எல்லாமே

என்ன

காதலா

தோல்வியா

கவலையா

பிரிவா

இழப்பா

உணரத்தான் முடிகிறது

உரைக்க முடியவில்லை


Thursday, April 22, 2010

அது

காலை எழும் நேரம்
கண் விழிக்க மறுக்கிறது
முன்பெல்லாம் மதியவேளை
அடி வயிற்றில் ஓடிய அந்த
வைரமுத்துவின் வார்த்தை உருண்டை
இன்று இதயத்தில் உருளுகிறது
இரவு வேளை இதமாய் என்னை
வருடும் பொது
இமைகள் அதுவாய் இணையும் தாருங்கள்
இன்றெல்லாம் வெறுப்பாகிறது
என் தூக்கம் ஒரு அருவருப்பகிறது
குளிக்கும் போது நான்கு கைகளை
மனம் நினைக்கிறது
நடக்கும் பொது பாத்து விரல்களை
விழிகள் ஏங்குகிறது
ஒருமையாய் இருந்த உள்ளம்
இன்று பன்மையை மாறியதன்
உண்மையான காரணம்
அதுவா ?
தெரியவில்லை ஆனால்
உள்ளம் மகிழ்கிறது
இத் தவிப்பில் நெகிழ்கிறது

Tuesday, April 13, 2010

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

கனவுகள் கை கோர்கட்டும்
கவலைகள் நசிந்து ஓடட்டும்
நினைவுகள் இனிமை ஆகட்டும்
நிஜத்தினில் மகிழ்ச்சி பொங்கட்டும்
நேற்றோடு போனது நம் துன்பமெல்லாம்
காற்றோடு போனது நம் தோல்வி எல்லாம்
சுவாசிப்போம் சந்தோசம் இன்று முதல்
சந்திப்போம் வெற்றியை இவ்வாண்டு முதல்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Monday, April 12, 2010

இறைவன் ?

காகிதத்தில்
எழுதிப் பார்த்தேன் கடவுளை
கல்லிலும் செதுக்கிப் பார்த்தேன்
கடவுளை

நிஜத்தில் நினைத்து பார்த்தேன் கடவுளை
நிஜமாய் வெறுத்து போனேன் கடவுளை
கண் கொடுத்து
ஒளி கொடுத்து
விழிக்குள் உயிர் கொடுத்து
இரு கை கொடுத்து
கால் கொடுத்து
குணம் கொடுத்து
மனம் கொடுத்து
எனை படைத்த இறைவன்
மனம் தன்னில் நிதம் என்னை வதம்
செய்து கொல்கிறான்

குழந்தை நண்பன்

வளர்ந்தவன் தான்

எங்களுள் கலந்தவன் தான்
வந்தான் எங்களுக்குள் ஒருவனாய்

வளர்ந்தான் அன்று முதல் தனி ஒருவனாய்

இருந்தவரை அவன் நிழல் கூட தனியாய் நடந்ததில்லை

இறுதிவரை அவன் நிழல் எங்களை தாண்டி சென்றதில்லை

எங்களுள் இருந்த பொறுமையை சோதித்தவன்

எங்களுள் இருந்த பொறாமையை கொன்று சாதித்தவன்

நண்பனை வந்தவன்

எங்கள் செல்ல குழந்தையாய் மாறினான்

வளர்ந்தவன் தான்

எங்களால் வளர்ந்தவன் தான்

நகர்ந்தவன் தான் இன்று எங்களை விடு நகர்ந்தவன் தான்





Tuesday, March 30, 2010

அவள்

அவள் அழகு என்னை அடிக்கவில்லை
அவள் பண்பு என்னை படுத்தவில்லை
அவள் பெண்மைக்கு நான் அடிமை இல்லை
ஆனாலும்
இன்று தோன்றுகிறது அவள் இல்லையெனில்
நான் இல்லை
என்ன சொல்வேன் என் நிலை
உறக்கம் வருகிறது
அவள் தானே என் உறக்கத்தின் உள் நோக்கம்
பசி படுத்துகிறது
அவள் நினைவுதானே என் உணவு
வெள்ளை காகிதம் எழுத்துகள் அழகாகிறது
அக் கவிதைகளின் நாயகி அவள் தானே
என் மொழி இனிமையாய் ஒலிக்கிறது
என் பேச்சின் மூலமே அவள் தானே
நிற்கையில்
நடக்கையில்
இருக்கையில்
என்றும் என் இரு கையின் ஈரம்
குறையாமல் பற்றும்
அவள் கரம்
வேண்டும் என்றும்
வேண்டுகிறேன் என்றும்

Sunday, March 14, 2010

மானசி - என் உடன் பிறவா பிறப்பின் பிறக்காத குழந்தை

மானசி
மனதினால் மானுவாகி போனவள்
பிஞ்சு விரல்கள்
கொஞ்சும் விழிகள்
தத்தையாய் தவழ்ந்து
என் நித்திரை பரிப்பவள்

வெள்ளித்திரை அறியாதவள்
சின்னத்திரை பற்றி புரியாதவள்
கணினியை காழ்போடு பார்க்கும்
சின்ன குயில் அவள்
விரல்களால் கிறுக்குவாள்
வியத்தகு ஓவியங்களை
தன்விழிகளால் பேசுவாள்
நயம் மிகு கவிதைகளை
காண்பவர்கள் கண் சிமிட்டாமல்
கண்மணி அவள் புகழ் பாடுவர்
என் கண்ணே மானு
பிறந்தால் நீ என் குழந்தையாய் மட்டும் இரு
உன் குதுகலம் கண்டால் போதும் கண்ணே

என் உள்ளம் உயிர் ரெண்டும் உன் பின்னே ஓடும்

Tuesday, March 2, 2010

அவன்

கண் முன் இல்லை
ஆனால் மனம் முழுவதும்
கால் கடுக்க என்னோடு நடக்கவில்லை
ஆனால்ஒவ்வொரு அடியிலும் அவனும்
அருகே அமர்ந்து உணவருந்தவில்லை
ஆனால் ஒவ்வொரு கவலதிலும் அவன்
அவன் மூச்சின் கற்று என் மேல் படவில்லை
ஆனால் நான் சுவாசிக்கும் மூச்சினிலும் அவன்
என் செய்வேன்
அவனாய் நான் மாறினேனோ
அவன்தான் என்னை மாற்றினானோ
சொல்லத் தெரியவில்லை
ஆனால் சுகமாய் இருக்குது இவ் வலி

Thursday, February 18, 2010

என்ன இது மாற்றம்

முன்பு
எண்ணங்கள் என்னிடமே இருந்தன
வார்த்தைகள் என் பேச்சை கேட்டன
நினைவுகள் நான் சொன்ன வழி நடந்தன
இதயம் இதமாய் துடித்தது
தெரியவில்லை
இன்று
எண்ணங்கள் என்னிடம் இல்லை
பேச்சு என் சொல்பேச்சு கேட்பதில்லை
நினைவுகள் உன்னைத்தான் சுற்றுகின்றன
இதயம் துடிப்பதில்லை பதிலாக
உன் பெயரை படிக்கிறது நொடிப்பொழுதும்
இந்த மற்றம் ஏழு நாள் முன்னே
என் செய்வேன்
எங்கனம் மீள்வேன்
வேதனை தான் ஆனால்
இவ்வலி ரணமாய் என்னை வாட்டவில்லை
பூவின் மனமாய் வீசுகிறது
என் உடல் உறுதியை குலைக்கவில்லை
மனதின் ஆற்றலை கூட்டுகிறது
பெண்ணே
உன்னே பெண்ணே என்று கூப்பிட உல் நாக்கு
முயல்கிறது
உதடு அன்பே என்ற வார்த்தை விட்டு வெளியே
வர மறுக்கிறது
என்ன மாற்றம் செய்தாய்
நீ என்று என்னுள் குடியேற்றம் செய்தாய்
வலிக்குதடி என் மனம்
நீ வேண்டும் என்று துடிக்குதடி என் உயிர்
வா கண்ணே
என் வாழ்வில் வா பெண்ணே


ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...