Sunday, June 20, 2010

தமிழ் பெண்ணின் அழகு

வகுடெடுத்து வரியா வளப்பான கருங்கூந்தல் அதில்
வண்ணமில்லா வெள்ளை மலர்கள் வீற்றிருந்தது அழகாக
படிவாய் படர்ந்த அந்த பச்சை வண்ண மேலாடை
படபடக்கும் பட்டாம் பூச்சி இமைகள்
இனிக்கின்ற இதழும்
கேள்வி குறி போன்ற செவியும்
அட
வள்ளுவனாய் பிறப்பிருந்தால் இவளை இருவரியில் வடித்திருப்பேன்
பாரதியை இருந்திருந்தால் அழகு தமிழ் இசையாய் இசைத்திருபேன்

உறக்கத்திற்கு இல்லாமல் போன இரக்கம்

உறக்கதிருக்கு இல்லாமல் போனது என் மேல் இரக்கம்
ஏன் இந்த அரக்க குணம் ?
பிறக்கத்தான் தெரிந்தது வழி
பிறக்கும் தான் புரிந்தது
வருத்தமா இல்லை வாழ்வில்
திருத்தமா தெரியவில்லை
நினைத்து பார்த்தேன்
கிறக்கம் தன வருகிறது

Saturday, June 19, 2010

இன்பம்

தனியே நின்றிருந்தேன்
புல் வெளியின் விளிம்பு
நதிக்கரை துவக்கம்
பாதம் புல்லின் மேல்
விரலோரம் நதி நீர் ஈரம்
இமை உயர உயர்ந்தது
விழி வியப்பில் விரிந்தது
இயற்கையின் இன்பம் எத்துனை
புல் தரும் பாதத்தில் சுகம்
நதி கொடுக்கும் இதம் நுனி நரம்பில் ஒரு ரகம்
அந்நொடி
உணர்ந்தேன்
இன்பத்தின் உச்சம்

inbam

தனியே நின்றிருந்தேன்
புல் வெளியின் விளிம்பு
நதிக்கரை துவக்கம்
பாதம் புல்லின் மேல்
விரலோரம் நதி நீர் ஈரம்
இமை உயர உயர்ந்தது
விழி வியப்பில் விரிந்தது
இயற்கையின் இன்பம் எத்துனை
புல் தரும் பாதத்தில் சுகம்
நாடி கொடுக்கும் இதம் நுனி நரம்பில் ஒரு ரகம்
அந்நொடி
உணர்ந்தேன்
இன்பத்தின் உச்சம்

Thursday, May 6, 2010

ஊசி முனை
உன் வார்த்தை
உரசியது உரிமையாய்
காற்றுப்பை
என் உள்ளம்
வெடித்ததடிவெறுமையாய்

Wednesday, May 5, 2010

இன்று நான்

இன்று நான்
கல்லடி பட்ட கண்ணாடி
நூல் அறுந்த காத்தாடி
வால் இழந்த பல்லி
வாடிவிழுந்த மல்லிகை
மழை மறைத்த வானவில்
சிறகொடிந்த பறவை
ஆட மறந்த மயில்
பாட மறந்த குயில்
இத்துனை குறிப்புகள்
என்னை குறிக்கும் வண்ணம்
குருகிப்போனேன்
எண்ணங்கள் கருகிப்போனேன்
காகிதத்தில் தீட்டினேன்
கார் வண்ண ஓவியம்
காகிதமே கிழிந்தது
என் ஓவியமும் மறைந்தது
சொல்லத் தெரியவில்லை என் வலி
சொல்லத் தேடுகிறேன் ஒரு வழி
ஆறாத ரணம் அல்ல இந்நிலை
என் கடலினில் ஓயாது அடித்திடும் ஒரு அலை

Tuesday, May 4, 2010

அது இது எது

இரவு இருளவில்லை

விடியலில் வெளிச்சமில்லை

நினைவு நகர வில்லை

என் நிகழ்வோ எதுவுமில்லை

காரணம் அது

வேலையில் நாட்டமில்லை

காலையில் விழிப்பு இல்லை

சோகமாய் கண்ணின் ஓரம்

ஈரமாய் கண்ணீரின் முல்லை

காரணம் இது

இனிப்புகள் இனிக்கவில்லை

என் இரவுகள் முடிவதில்லை

வாழ்வினில் நாட்டம் இல்லை

நான் வாழ்வதில் அர்த்தம் இல்லை

காரணம் அது

இவனது நினைவுகளுக்கும்

இவ்வகை நிகழ்வுகளுக்கும்

இதுவா அதுவா

எதுதான் கரணம்

இது அது எது எல்லாமே

என்ன

காதலா

தோல்வியா

கவலையா

பிரிவா

இழப்பா

உணரத்தான் முடிகிறது

உரைக்க முடியவில்லை


Thursday, April 22, 2010

அது

காலை எழும் நேரம்
கண் விழிக்க மறுக்கிறது
முன்பெல்லாம் மதியவேளை
அடி வயிற்றில் ஓடிய அந்த
வைரமுத்துவின் வார்த்தை உருண்டை
இன்று இதயத்தில் உருளுகிறது
இரவு வேளை இதமாய் என்னை
வருடும் பொது
இமைகள் அதுவாய் இணையும் தாருங்கள்
இன்றெல்லாம் வெறுப்பாகிறது
என் தூக்கம் ஒரு அருவருப்பகிறது
குளிக்கும் போது நான்கு கைகளை
மனம் நினைக்கிறது
நடக்கும் பொது பாத்து விரல்களை
விழிகள் ஏங்குகிறது
ஒருமையாய் இருந்த உள்ளம்
இன்று பன்மையை மாறியதன்
உண்மையான காரணம்
அதுவா ?
தெரியவில்லை ஆனால்
உள்ளம் மகிழ்கிறது
இத் தவிப்பில் நெகிழ்கிறது

Tuesday, April 13, 2010

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

கனவுகள் கை கோர்கட்டும்
கவலைகள் நசிந்து ஓடட்டும்
நினைவுகள் இனிமை ஆகட்டும்
நிஜத்தினில் மகிழ்ச்சி பொங்கட்டும்
நேற்றோடு போனது நம் துன்பமெல்லாம்
காற்றோடு போனது நம் தோல்வி எல்லாம்
சுவாசிப்போம் சந்தோசம் இன்று முதல்
சந்திப்போம் வெற்றியை இவ்வாண்டு முதல்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Monday, April 12, 2010

இறைவன் ?

காகிதத்தில்
எழுதிப் பார்த்தேன் கடவுளை
கல்லிலும் செதுக்கிப் பார்த்தேன்
கடவுளை

நிஜத்தில் நினைத்து பார்த்தேன் கடவுளை
நிஜமாய் வெறுத்து போனேன் கடவுளை
கண் கொடுத்து
ஒளி கொடுத்து
விழிக்குள் உயிர் கொடுத்து
இரு கை கொடுத்து
கால் கொடுத்து
குணம் கொடுத்து
மனம் கொடுத்து
எனை படைத்த இறைவன்
மனம் தன்னில் நிதம் என்னை வதம்
செய்து கொல்கிறான்

குழந்தை நண்பன்

வளர்ந்தவன் தான்

எங்களுள் கலந்தவன் தான்
வந்தான் எங்களுக்குள் ஒருவனாய்

வளர்ந்தான் அன்று முதல் தனி ஒருவனாய்

இருந்தவரை அவன் நிழல் கூட தனியாய் நடந்ததில்லை

இறுதிவரை அவன் நிழல் எங்களை தாண்டி சென்றதில்லை

எங்களுள் இருந்த பொறுமையை சோதித்தவன்

எங்களுள் இருந்த பொறாமையை கொன்று சாதித்தவன்

நண்பனை வந்தவன்

எங்கள் செல்ல குழந்தையாய் மாறினான்

வளர்ந்தவன் தான்

எங்களால் வளர்ந்தவன் தான்

நகர்ந்தவன் தான் இன்று எங்களை விடு நகர்ந்தவன் தான்





ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...