Tuesday, February 12, 2019

பேருந்து பயணம்

சாலையோரம்
சகதி ஊடே
சற்றே சங்கடத்தோடு நின்றிருந்தேன்
தூரத்தில் வந்தது என் பேருந்து
ஏறும் வரை இருந்த சலிப்பு
கண்டதும் வந்தது ஓர் நகைப்பு
என்ன ஒரு அமைப்பு
ஏறினேன் உள்ளே
சொர்க்கமோயோசித்தேன்
இருபுறமும் தேவதைகள்
போதவில்லை என் இரு விழிகள்
கிட்டியது ஒரு இடம்
ஒரு தேவதையின் வலப்புறம்
இடிக்காமல் உள் நுழைந்தேன்
ஓடியது என் வாட்டம்
இனி போகும் வழி கொண்டாட்டம்

No comments:

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...