Saturday, January 30, 2010

குழந்தையாய் இருந்திருந்தால்

குழந்தையாய் இருந்திருந்தால்
குட்டையை பார்த்தால்
குதித்து விளையாடி இருக்கலாம்
குறிபார்த்து பக்கத்துக்கு வீட்டு
கண்ணாடி ஜன்னலை உடைத்து இருக்கலாம்
உருகி ஓடும் ஐஸ் குச்சியை
நுனி நாக்கால் நான்றாக உறிஞ்சி சுவைத்திருக்கலாம்
அடித்தாலும் அம்மா நம்மை அன்பாக அரவணைப்பால்
தடுத்தாலும் தந்தை நம்மோடு ஆசையாய் விளையாடி இருப்பார்
ஆசை தாத அன்பு பாட்டி
அளவிலா முத்ததை அமுதாய் பொழிந்து இருப்பர்
வரப்போவதில்லை அக்கணங்கள் திரும்பி
வலித்தாலும் ஏற்க வேண்டும் இந்நிலையை நாம் விரும்பி

நண்பா உனக்காக

நடக்கத் தெரியாத குழந்தைக்கு
நடை பயிற்றும் தந்தையை
படிக்கப் பழகும் பிள்ளையை
பயிற்று விக்கும் ஆசானாய்
வெற்றி பெறத் துடிக்கும்
வீரனின் தளபதியாய்
உறவாய்
நட்பாய்
நேசமாய்
பாசமாய்
என்னையும் ஒருவனாய்
இறையாண்மைக்கு உரியவனை
உருவாக ஊக்குவித்த
நீ வளம் பல பெற்று
நலமோடு வாழ
உளமார இறைவனை
உருகி நான் வேண்டுகிறேன்

Friday, January 29, 2010

மலரே.....

எனக்கு முன் மலர்ந்தாயோ
ஏன் மலர்ந்தென்னை மறைத்தாயோ
மறைத்ததில் நான் வருத்தவில்லை
நீ மலர்ந்ததிலும் எனக்கு மகிழ்ச்சி இல்லை
மலரே
என் மலரே
நீ மலர்ந்தென்னை மறப்பாயோ என்று
என்னும் நொடி மட்டும் உன் இதழ்
தாங்கும் முட்கள் என் இதயத்தை
துளைக்கிறதே

Thursday, January 28, 2010

கண்மணி

ஏந்தினேன் என் கண்மணியை
கையில் எதோ இலவம் பஞ்சு படர்ந்த ஒரு சுகம்
மகத்தில் ரோஜாபூ இதழ் பட்ட ஒரு சுகம்
அமமல்லிகை முகம் என் மனதில் ஒரு புரியாத சிலிர்ப்பை தந்தது
எட்டி உதிக்கும் என் கண்மணியின் பட்டு பதங்கள்
வழியை தரவில்லை பதிலாக என் மொழியை பறித்தன
பேச துடித்தேன் பேச்சு வரவில்லை
துளிகளால் நிறைந்த என் கண்கள்
வருந்துகிறேன் நான் என் வளர்ந்துவிட்டேன் என்று

இவை

பழகத் தேவை நொடிகள்
பிரியத் தேவை சில அடிகள்
இணையத் தேவை சில வழிகள்
இணைக்கும் நம்மை நம் விழிகள்

யதார்த்தம்

உண்மையில் உண்மையாய் இருப்பின்
உரிமைகள் உண்மையாய் இருக்கும்
உண்மையின் மை தீர்ந்து போனால்
உரிமைகள் ஊமை ஆகி தேயும்

Wednesday, March 4, 2009

உன் இழப்பு

உன் இழப்பு
என் இறப்பு
என் செய்வேன் என் தோழி
இறைவன் கொடுக்கவில்லை
இருவர் இணையும் வாரம்
இனியும் கிடைக்க போவதில்லை
உன் போல் ஒரு குணம்
இன்று முதல் இது என் நெஞ்சில்
என்றும் ஆறா ஒரு ரணம்
ஈடு செய்ய எண்ணுவாதை விட
இறந்த காலமாக்க எண்ணுகிறேன்
முடியவில்லை
நிழலாய் நீ வந்திருந்தால்
என் நினவுகளில் நின்றிருக்கமாட்டாய்
நிஜமாய் வந்தவளே
உன் நெஞ்சினில் என்னைத் தைத்தவளே
எங்ஙனம் உனை மறப்பேன்
உனை மறந்தால் எங்ஙனம் இவ்வுலகில் இருப்பேன்
வளமொடு வாழ்க நீ
என்றும் என் மனதில் அணையாத தீ
- இவன்

Thursday, February 19, 2009

திருமணம்

பொருளாதாரத்தின் விளம்பரமாய்
இன்று திருமணம்
இரு மனங்கள் ஒருமிக்க
இயற்கை அதன் துணை நிற்க
பெரியவர் சிறியவார் வாழ்த்து பாட
பெண்ணவளின் கை பிடிக்கும் பேரின்ப
நிகழ்வதை இன்று
அழைப்பு இல்லாமல்
ஆடம்பரஆடைகளில்
பொன் நகை குறைந்து
புன்னகை அழிந்து
உறவுகள் இல்லாமல்
உணவருந்த கையேந்தும் அவலத்தோடு

பெரியவர்கள் பாதம் தொட்டு
ஆசி பெற்ற காலம் விட்டு
கை குலுக்கும் கட்டி அணைக்கும்
கலாசாரததினால் கட்டுண்டு
திருமணத்தின் உண்மை தன்னை
மனத்துக்குள் புதைத்து விட்டு
வெறுமையாய் இருவர் சேரும்
ஒரு இயல்பான நிகழ்வாய் இன்று திருமணம்

Thursday, February 12, 2009

சினிமா

வெள்ளை திரையில்
வண்ணப் படம்

விரல்களில் விததைகள்
விழிகளில் தீப்பொறி
கண்ணசைவில் காதல்
கைப்பிடித்தால் கல்யாணம்
கனவினில் காதல் பாடல்
கடைசியில் காணும் சுபம்
நிஜத்தில்நடக்காததெல்லாம்
நிழல் படத்தில்

இரண்டு மணி நேரத்தில்
இனியதொரு வாழ்வை
இன்ப துன்பம் கலந்து

20 ரூபாய் செலவில் காட்டும்
கனவு தொழிற்சாலை
சினிமா

மன்னிப்பு

கண்களில் ஈரத்தொடு
நெஞ்சினில் பாரத்தொடு
அவளிடம் சொன்னேன்
என்னை மன்னிப்பாய
அவள் ஈரத்தின் மேல்
அனலை மூடி
அதில் என் அன்பை வாடி
உயிரோடுஇட்டாள் சிதையில்

எரியவில்லை என் மனம்
என்னிடம் தான் இல்லையே என் மனம்
அவள் நெஞ்சம் எரியும் என்று
எரியும் தீயிலும் கண்ணீர் சிந்தினேன்

சாதி

சாத்திரத்தில் சொல்லவில்லை கோத்திரம் பார்க்க வேண்டுமென்று
சூத்திரர்கள் பிராமணர்கள் என்றும் ஒரு பிரிவும் இருக்கவில்லை
படைத்தவையும் பிரித்து வைத்து படைப்புகளுள் வெறுப்பை வைத்து
மணங்களெல்லாம் ரனங்களாக்கும் அவனமான சின்னமாய்
சாதி
கிளப்பும் பீதியை அடியோடு அழிக்க வேண்டும் இல்லயெல் மீதம் இருக்கும் மனிதரும் வாதம் செய்தே வாழ்வழிந்து போவார்

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...