கண்டாங்கி சேலை கட்டி
கஞ்சி கலயம் சுமந்துகிட்டு
மஞ்சள் பூசின முகத்துலதான்
சென்னேரத்துல சாந்து போட்டு
மல்லிகைய வச்சிருப்பா
வாயில் வெத்தலைய போட்டுருப்பா
வெத்தலையில் சிவந்திருக்கும்
குமரி அவ உதடு ரெண்டும்
யப்பா பாத்ததுமே பறந்து போகும்
என் ஒடம்பு கொண்ட களைப்பு எல்லாம்
Monday, November 29, 2010
சந்தோசம்
மூணு வேலை சோறு போட்டு
வருஷம் ரெண்டு துணி குடுத்து
காடு மேடு பள்ளமெல்லாம் சரி செய்ய சொல்லி புட்டு
காஞ்சி குடிச்சி சுத்துகிற விவசாயி சந்தோசம்
கைநெறைய காசு வாங்கி
கால் மேல காலு போட்டு
சட்டையோட கழுத்து பட்டை
கொஞ்சம் கூட கசங்காம
வேத்து மொழி பேசிக்கிட்டு
புள்ளைக கூட ஆட்டம் போட்டு
வேலைன்ற பேருல எதையோ செஞ்சு போகும்
கவலை பத்தி கொஞ்சம் கூட கவலையே இல்லாத
இந்த கம்ப்யூட்டர் பசங்களுக்கு என்னைக்காவது
கெடைச்சிருக்குமோ ?
வருஷம் ரெண்டு துணி குடுத்து
காடு மேடு பள்ளமெல்லாம் சரி செய்ய சொல்லி புட்டு
காஞ்சி குடிச்சி சுத்துகிற விவசாயி சந்தோசம்
கைநெறைய காசு வாங்கி
கால் மேல காலு போட்டு
சட்டையோட கழுத்து பட்டை
கொஞ்சம் கூட கசங்காம
வேத்து மொழி பேசிக்கிட்டு
புள்ளைக கூட ஆட்டம் போட்டு
வேலைன்ற பேருல எதையோ செஞ்சு போகும்
கவலை பத்தி கொஞ்சம் கூட கவலையே இல்லாத
இந்த கம்ப்யூட்டர் பசங்களுக்கு என்னைக்காவது
கெடைச்சிருக்குமோ ?
தந்தை
அதிகாலை
அன்பு மனைவிக்கு முன் எழுந்து
ஓடோடி பால் வாங்கி வீடு வந்து
செல்லப் பிள்ளைகளை எழச் செய்து
அவரோடு மன்றாடி பள்ளிக்கு தயார் செய்து
மனைவி தரும் உணவதை குழந்தைகளை அருந்த வைத்து
இரு சக்கர வாகனத்தின் இரு புறமும் அவர்களை அமர்த்தி
வழியெல்லாம் அவரோடு கதை பேசி
பள்ளி கொண்டு விட்ட பின்பு
அவர்தம் தலை வாரி முகம் துடைத்து
ஒரு முறைக்கு பல முறை அவர் நோக்கிக் கை அசைத்து
முன்பை விட வேகமாக வீடு வந்து
கை கிடைத்த உணவதனை அவசரமாய் ருசித்து விட்டு
கை கடிகாரத்தை பார்த்து கொண்டாய்
அலுவலகம் நோக்கி போகும்
பொறுப்பு மிகு தந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்
அன்பு மனைவிக்கு முன் எழுந்து
ஓடோடி பால் வாங்கி வீடு வந்து
செல்லப் பிள்ளைகளை எழச் செய்து
அவரோடு மன்றாடி பள்ளிக்கு தயார் செய்து
மனைவி தரும் உணவதை குழந்தைகளை அருந்த வைத்து
இரு சக்கர வாகனத்தின் இரு புறமும் அவர்களை அமர்த்தி
வழியெல்லாம் அவரோடு கதை பேசி
பள்ளி கொண்டு விட்ட பின்பு
அவர்தம் தலை வாரி முகம் துடைத்து
ஒரு முறைக்கு பல முறை அவர் நோக்கிக் கை அசைத்து
முன்பை விட வேகமாக வீடு வந்து
கை கிடைத்த உணவதனை அவசரமாய் ருசித்து விட்டு
கை கடிகாரத்தை பார்த்து கொண்டாய்
அலுவலகம் நோக்கி போகும்
பொறுப்பு மிகு தந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்
அவள் பிரிவால்.......
இருண்டது என் இதயம்
இயங்க முரண்டது அது நிதமும்
அவள் நினைவில் துடித்திருந்தது
அவள் பெயரால் உயிர்த்திருந்தது
என் விரல்களை விடு அவள் நீகும் நேரம்
என் கண்ணோரம் துளிர்த்தது
ஒரு ஈரம்
**********************************************
உன் கூர் மூக்கும்
குறு குறு பார்வையும் அழகாய்
குவிந்த இதழ்களும்
கார் மேகம் ஒத்த கூந்தலும்
எனதில்லை என்று எண்ணும் நேரம்
இனம் புரியா இதய வலி கண்ணே
நீ வந்து சென்ற இதயம்
பாலைவனமாய் வரண்டது
தடம் தெரியா வழி சென்ற நீ
இன்னும் வசிக்கிறாய் என் விழிகளில்
இயங்க முரண்டது அது நிதமும்
அவள் நினைவில் துடித்திருந்தது
அவள் பெயரால் உயிர்த்திருந்தது
என் விரல்களை விடு அவள் நீகும் நேரம்
என் கண்ணோரம் துளிர்த்தது
ஒரு ஈரம்
**********************************************
உன் கூர் மூக்கும்
குறு குறு பார்வையும் அழகாய்
குவிந்த இதழ்களும்
கார் மேகம் ஒத்த கூந்தலும்
எனதில்லை என்று எண்ணும் நேரம்
இனம் புரியா இதய வலி கண்ணே
நீ வந்து சென்ற இதயம்
பாலைவனமாய் வரண்டது
தடம் தெரியா வழி சென்ற நீ
இன்னும் வசிக்கிறாய் என் விழிகளில்
Saturday, October 23, 2010
வலிக்கத்தான் வலிகள்
புத்திக்கு தெரிவதெல்லாம்
நம் மனதிற்கு புரிவதில்லை
சரியே
ஆம்
இழந்தாலும் விடுவதில்லை
முடிந்தாலும் நிறுத்தவில்லை
நினைவுகளால் வதைப்பதும்
இறந்த நிஜங்களை மீண்டும் விதைப்பதும்
சுகமான வலி என்று கவிஞர் கூறினும்
வலிக்கிறதே வாழ்வே சலிக்கிறதே
நம் மனதிற்கு புரிவதில்லை
சரியே
ஆம்
இழந்தாலும் விடுவதில்லை
முடிந்தாலும் நிறுத்தவில்லை
நினைவுகளால் வதைப்பதும்
இறந்த நிஜங்களை மீண்டும் விதைப்பதும்
சுகமான வலி என்று கவிஞர் கூறினும்
வலிக்கிறதே வாழ்வே சலிக்கிறதே
Friday, August 27, 2010
pen தோழி
என் இனிய pen தோழியே
என் தோழியாய் பின் நின்று
என் வார்த்தையின் வளமை கண்டு
என் மீது உரிமை கொண்டு
என் எழுத்தை செதுக்கி
என் ஆற்றல் பெருக்கி
எனை ஆக்கினாய்
எழுத்தாளனாய்
என் தோழியாய் நீ இருப்பதினும்
என் pen தோழியாய் இருப்பதில்
இறுமாப்பு கொள்கிறேன்
:)
என் தோழியாய் பின் நின்று
என் வார்த்தையின் வளமை கண்டு
என் மீது உரிமை கொண்டு
என் எழுத்தை செதுக்கி
என் ஆற்றல் பெருக்கி
எனை ஆக்கினாய்
எழுத்தாளனாய்
என் தோழியாய் நீ இருப்பதினும்
என் pen தோழியாய் இருப்பதில்
இறுமாப்பு கொள்கிறேன்
:)
பாவம் முதிர் கன்னிகள்
காதலித்து பார்த்தேன்
காதலில் தோல்வியுற்றும் பார்த்தேன்
களங்கமிலா உள்ளம்
என் மேல் காதல் கொண்டும் பார்த்தேன்
இன்று
கல்யாண சந்தையில் கால் கடுக்க நிறுத்த பட்டேன்
பல் பிடித்து பார்க்கும் சிலபேர்
என் purse பிடித்து பார்க்கும் பலபேர்
நோகா நெஞ்சில் நயவஞ்சகமாய்
வஞ்சகமாய் உல் செலுத்தும் வெகு பேர்
என் சொல்வேன் இச்சந்தை
எனை விற்க என்ன யுக்தி செயகுமோ
பாவம் முதிர் கன்னிகள்
காதலில் தோல்வியுற்றும் பார்த்தேன்
களங்கமிலா உள்ளம்
என் மேல் காதல் கொண்டும் பார்த்தேன்
இன்று
கல்யாண சந்தையில் கால் கடுக்க நிறுத்த பட்டேன்
பல் பிடித்து பார்க்கும் சிலபேர்
என் purse பிடித்து பார்க்கும் பலபேர்
நோகா நெஞ்சில் நயவஞ்சகமாய்
வஞ்சகமாய் உல் செலுத்தும் வெகு பேர்
என் சொல்வேன் இச்சந்தை
எனை விற்க என்ன யுக்தி செயகுமோ
பாவம் முதிர் கன்னிகள்
Thursday, August 26, 2010
என்
அன்றோ..
வலித்தது பசித்தது
தவித்தது துடித்தது
இனித்தது கசந்தது
இயற்கையில் என் மனம் லயித்தது
உள்ளத்தின் ஓசைகளை என் உள்ளங்கை அறிந்தது
நெஞ்சத்தின் ஆசைகளை என் நகக்கண்ணும் உணர்ந்தது
இன்றோ.
வழியுமில்லை வலியும்மில்லை
செவி கேட்கும் ஒலிகள் என் செவியோடு மறைந்தது
கவி பாட தூண்டும் எண்ணம் என்னுள் கல்லறை கட்டி புகுந்தது
மாற்றமா இது ஒரு இடை நிலை தோற்றமா
தோணவில்லை
வலித்தது பசித்தது
தவித்தது துடித்தது
இனித்தது கசந்தது
இயற்கையில் என் மனம் லயித்தது
உள்ளத்தின் ஓசைகளை என் உள்ளங்கை அறிந்தது
நெஞ்சத்தின் ஆசைகளை என் நகக்கண்ணும் உணர்ந்தது
இன்றோ.
வழியுமில்லை வலியும்மில்லை
செவி கேட்கும் ஒலிகள் என் செவியோடு மறைந்தது
கவி பாட தூண்டும் எண்ணம் என்னுள் கல்லறை கட்டி புகுந்தது
மாற்றமா இது ஒரு இடை நிலை தோற்றமா
தோணவில்லை
Wednesday, August 25, 2010
குடை மீது கோபம்
துளிகளை அணிகலாக்கி
கார்மேகத்தை உடையாய் கொண்டு
கவர்ச்சியாய் நடனம் ஆடும்
அக் கார்குழல் மழை அழகியின்
உருவத்தை மறைக்கும் இந்த
குடை மீது எனக்கு கோபம்
எழுத சொன்ன இதயத்திற்காய்
இறந்து போன இதயத்தில்
இரு சொட்டு எண்ணெய் விட்டு
இரு மடங்காய் ஒளி கொடுத்தாள்
என் மனம்
மறந்து போன வார்த்தைகளை தன்
அன்பால் கறந்து சேர்த்து கவிதை ஆக்கியவள்
எழுத சொன்னால் என்னை
இயங்கியவற்றை எழுதிய நான்
இன்று இயங்க மறுக்கும் என் இதயத்தை பற்றி எழுத முயல்கிறேன்
இரு சொட்டு எண்ணெய் விட்டு
இரு மடங்காய் ஒளி கொடுத்தாள்
என் மனம்
மறந்து போன வார்த்தைகளை தன்
அன்பால் கறந்து சேர்த்து கவிதை ஆக்கியவள்
எழுத சொன்னால் என்னை
இயங்கியவற்றை எழுதிய நான்
இன்று இயங்க மறுக்கும் என் இதயத்தை பற்றி எழுத முயல்கிறேன்
Sunday, June 20, 2010
தமிழ் பெண்ணின் அழகு
வகுடெடுத்து வரியா வளப்பான கருங்கூந்தல் அதில்
வண்ணமில்லா வெள்ளை மலர்கள் வீற்றிருந்தது அழகாக
படிவாய் படர்ந்த அந்த பச்சை வண்ண மேலாடை
படபடக்கும் பட்டாம் பூச்சி இமைகள்
இனிக்கின்ற இதழும்
கேள்வி குறி போன்ற செவியும்
அட
வள்ளுவனாய் பிறப்பிருந்தால் இவளை இருவரியில் வடித்திருப்பேன்
பாரதியை இருந்திருந்தால் அழகு தமிழ் இசையாய் இசைத்திருபேன்
Subscribe to:
Posts (Atom)
ஆடாய் கனைக்கும் சிங்கம்
பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால் பல் முளைத்து விடுமாஇல்லை பல்ப மிட்டாய் கசந்திடுமா மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...