Thursday, March 29, 2012

அடியல்ல இது என்னுள் வெடி

நிலை மாறி நின்ற நான் 
என் நிழல் மாற உணரவில்லை 
அதற்காய் விலை தந்தேன் 
என் விருப்பங்கள் 
 சிலை வந்ததென் வாழ்வில் 
பின் உலை வைத்ததேன் என் கலையில் 
உணர முயல்கையில் 
உண்மை உறைக்கிறது 
விருப்பங்கள் வீண் இல்லை 
திருப்பங்கள் தான் வாழ்வின் எல்லை 
 மாறும் நிலையும் மலரும் கலையும் 
 உண்மை ஏற்றுகொள் 
உன்னை தேற்றிக்கொள்

Thursday, October 20, 2011

என்ன எழுத ?

இயலாத இதயமும்
இருண்டுள்ள விழிகளும்
சோகமுமாய் கோபமுமாய்
அலைந்திருக்கும் தேகமும்
சூழ்நிலை அறியா சுயநலமும்
வெறுமையும்
வெறுப்பும்
ஒவ்வாமையும்
இங்ஙனம்
உயரதுடிக்காத
ஒன்றுக்கும் உதவாத
ஒரு நோக்கு கொண்டவனின்
விரல் இடுக்கு எழுத்தாணி
எங்கனம் எழுதும்

நடுவில் நான்

அளவில்லா அன்பு
அடைப்பில்லா பாசம்
என்னை அணைத்திருக்கும் காதல்
இவை நடுவில் நான்
குளிர் நடுக்கும் குழந்தையாய்
குரல் அடைத்த குயிலாய்
இறகொடிந்த மயிலாய்
அழுகவும் முடியாமல்
உரக்க உளறவும் இயலாமல்
உள்ளுக்குள் உணருகிறேன் என் வலி
அது என் உறுதியாய் குலைகின்ற உளி

இல்லைகள்

அழகில்லை
அறிவில்லை
பணமில்லை
பதவியில்லை
புகழில்லை
இவ் "இல்லைகள்" அல்ல வாழ்வின் "எல்லைகள்"
நம்பிக்கை
நன்னடத்தை
இன்முகம்
இடி தாங்கும் இதயம்
இவை கொள் அவை துரத்தும் உன் தாழ்வின் "தொல்லைகள்"

Monday, April 11, 2011

உறக்கம்

மெத்தையில் தத்தையாய் தவழ்ந்து சித்தம் அது தளர்ந்து சத்தம் குறைந்து பித்தமாய் இரு கண் மூடியும் வரவில்லை வந்தது என் வேலையின் இடைவேளையில் வழக்கத்தின் மாறாய் இவ்வுறக்கம்

Wednesday, December 22, 2010

தூறல் நின்றது

நேற்றுவரை நில்லாமல் என்னை
நனைத்து வந்த தூறல் நின்றது
ஆம் அவள் என் விரல் நீங்கி சென்றதால்
உன்னால் துளிர்த்திருந்த என் இதயம்
துவண்டது
நீர் இன்றி வரண்டது
உன் தூறல் ஒலி
கேட்டு உயிர்த்திருத்த செவி
இன்றோ மலர் வலயத்தால் மறைக்கப்பட்டு விட்டது
உன் மழை தந்த ஈரம் பட
நடந்திருந்த பாதங்கள்
நின்றது முழுவதுமாய்
முற்றிலுமாய்

Sunday, December 5, 2010

கண்ணழகி

காலைப் பேருந்தில் கண்டேன்அவளை
கோடிக் கண்கள் நடுவில்
இஜ் ஜோடிக் கண்கள்
வலை வீசி பிடித்தன என்னை
கண நேரம் எனை மறந்தேன்
எனை அறியாமல் நான் பறந்தேன்
அவள் விழிகள் பேசிய மொழிகளை
இமை மூடாமல் படித்து நின்றேன்
இருக்கை இல்லையென்றால் இயல்பாய் சாடும் மனம்
இன்று இன்பத்தில் திளைத்தது அவள் அருகில் நின்றதால்
அவள் வேல் விழிகள் என்னைக் கொள்ளாதோ
அவள் விழி வில்கள் அம்புகளை தொடுக்காதோ
இன்னும் ஒரு முறை
இப்போரில் மாட்டி
இன்னுயிரை துயிர்க்க
ஏங்குகிறேன் நான்

Thursday, December 2, 2010

இன்பம்

இதழோர சிரிப்பும்
இமையோர கண்ணீர் துளிர்ப்பும்
இரண்டரக்கலந்ததில்லை
உன் இரு விழி என்னில்
இரண்டறக் கலந்த கணம்
என் விழிகளில் துளிர்த்தன துளிகள்
என் முகத்திலோ புன்சிரி ஒளிகள்
இதுதான் இன்பமோ
இன்று கண்டுணர்ந்தேன்

Wednesday, December 1, 2010

என் தெரு நாய்கள்

புது வீடு நோக்கி நடந்து வந்தேன் முதல் நாளில்
அத்தெருவின் மூதாதையர்
மேதகு நாய்கள்வரவேற்றன வழக்கம் போல்
இரு நாய்கள் தள்ளி நின்று சிறு நாய்கள் என்னை சுற்றி நின்று
ஓயாமல் குரைத்தன
எனைஓட வைக்கத்தான் நினைத்தன
இதயத்தை கையில் இறுக்கமாய் கொண்டு
அடி மீது அடி வைத்து நடந்து போனேன் புதுப் பெண் போல்
மறுநாள் அதே வேளை
மனதுக்குள் பய உதறல்
துர்கையையும் காளியையும் துணைக்கு அழைத்துக்கொண்டே
மெதுவாக நுழைந்தேன் வீதியில்
அதே நாய்கள்நின்றன
அவற்றின் விழிகள் உருண்டன எனக்கோ
கண்கள் மருண்டன
ஆச்சர்யம்!!!
சத்தமில்லை சலனமில்லை
சிறு பிள்ளையாய் எனை பார்த்துஆட்டின தம் வாலை
நான் கிள்ளி பார்த்தேன் என் தோளை
உணர்ந்தேன்
அவைகொள்ளும் அடையாளம் ஒருமுறையில்
ஆயின் அதை உணரும் பாங்கில்லை நம் நடைமுறையில்

Monday, November 29, 2010

என் கிராமத்து காதலி

கண்டாங்கி சேலை கட்டி
கஞ்சி கலயம் சுமந்துகிட்டு
மஞ்சள் பூசின முகத்துலதான்
சென்னேரத்துல சாந்து போட்டு
மல்லிகைய வச்சிருப்பா
வாயில் வெத்தலைய போட்டுருப்பா
வெத்தலையில் சிவந்திருக்கும்
குமரி அவ உதடு ரெண்டும்
யப்பா பாத்ததுமே பறந்து போகும்
என் ஒடம்பு கொண்ட களைப்பு எல்லாம்

சந்தோசம்

மூணு வேலை சோறு போட்டு
வருஷம் ரெண்டு துணி குடுத்து
காடு மேடு பள்ளமெல்லாம் சரி செய்ய சொல்லி புட்டு
காஞ்சி குடிச்சி சுத்துகிற விவசாயி சந்தோசம்
கைநெறைய காசு வாங்கி
கால் மேல காலு போட்டு
சட்டையோட கழுத்து பட்டை
கொஞ்சம் கூட கசங்காம
வேத்து மொழி பேசிக்கிட்டு
புள்ளைக கூட ஆட்டம் போட்டு
வேலைன்ற பேருல எதையோ செஞ்சு போகும்
கவலை பத்தி கொஞ்சம் கூட கவலையே இல்லாத
இந்த கம்ப்யூட்டர் பசங்களுக்கு என்னைக்காவது
கெடைச்சிருக்குமோ ?

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...