Wednesday, March 26, 2008

காதலே

முத்தத்தின்
சத்தத்தினை
நித்தமும்
என் சித்தத்தில்

ரீங்காரமாய்
ஆங்காரமாய்
ஓங்காரமாய்

இசைத்து
எனை அசைத்து
உயிரில் பசையாய்
என்றும் நிலைத்து

என் பாவத்தை
கோபத்தை
தாபத்தை

குணமாக்கி
ரணமான என் உள்ளம்
மிதமாக இனி துள்ளும்

விதமாக என் வாழ்வை
வளம் ஆக்க வந்த
நீ
உருவத்தை மறுத்து விடும்
உலகுஆளும் கடவுளை போல்
என்னுள் வர மறுக்கிறாய்
என்னை உன்னுள் கரைக்க முயல்கிறாய்

குருடனின் வெளிச்சம்

திசை இலா பட்டம் போல
இசை இலா குழல்கள் போல
பசி இலா வயிறு போல
ருசி இலா கனிகள் போல

நோக்கில்லா வாழ்வை வாழ்ந்து என்
போக்கினை மறந்து விட்டேன்

விழிகளை இழந்த பின்னே
விடியலை வேண்டி நின்று

முடிவிலா பாதை தன்னில்
என் பயணத்தைத் தொடருகின்றேன்

குருடனின் வாழ்வின்
கும்மிருட்டு வெளிச்சம் போல்
வெளிச்சத்தை தேடி விழியின்றி அலைகின்றேன்

எனது சென்ற வருட நட்பு

ஒரு வருடம்
பல மாதம் முன்
ஓரிரவு நேரம்
புகை வண்டி நிலையம்
அவள் வந்தாள்
வழி கேட்டாள்
வழி சொன்னதன் பதிலாக
நட்பை தந்தாள்
திரும்பி பார்த்தால்
ஓடியது ஒரு வருடம்
வாழ்க்கையின் வேகம் தான் எத்துனை
அவளிடம் கேட்டேன்
இது நட்பா இல்லை
அதையும் தாண்டியாத என்று
கட்டாயமாக மறுத்தாள்
சற்றே கடிந்து கொண்டாள்

அப்பொழுதுதான்
உணர்ந்தேன்இது நட்பின் உயர்ந்த நிலை என்று

பூரிக்கிறேன் என் நட்பை கண்டு
புன்னகைகிறேன் என் நண்பியை கண்டு
அனைத்தையும் சொல்வாள்
அன்பினால் கொள்வாள்

எனக்குள் இருந்த என்னை
எனக்கே உணர்த்திய
என் அன்பு நண்பியே

காலம் நம்மை பிரிக்கலாம்
வேலையால் விட்டு விலகலாம்
நமக்குள் இருக்கும் இந்த நட்பு
கலக்கும் காற்றுடன் இந்த உலகெல்லாம்

Tuesday, March 4, 2008

கவலை

பசிக்கவில்லை
தூக்கம் வரவில்லை
தனிமை இனிமையானது
இரவு நீண்டது
பகல் முடிய மறுத்தது
உலகம் சுழியாய் தோன்றியது
மேகம் நகரவில்லை
மரங்கள் அசையவில்லை
நண்பர்கள் காதல் என்றார்கள்
அப்பாவிகள்
இது கவலை என்று கூட
கண்டறிய இயலாதவர்கள்

விட்டு செல்கிறேன்

இடமான குளிர்
இன்பமான இரவு நேரம்
மிதமான வெயில்
மெல்லிய இளங்காற்று
சாலையின் இரு மருங்கிலும்
அழகு மரங்கள்
விண்வெளியை நினைவூட்டும்
இரு சக்கர ஊர்திகள்
வனத்தில் பறக்க என்னும்
னர் சக்கர ஊர்திகள்
வீட்டுக்குள் எட்டி பார்க்கும்
ரோட்டின் புழுதிக l
பாதை முழுவதும்
பட்டாம் பூச்சிகள்
வீதி இரு மருங்கிலும்
வெள்ளை தேவதைகள்
விட்டு செல்கிறேன்
பூங்கா நகரத்தை

உலகம்

ஒரு வார்த்தை
ஒரு பார்வை
ஒரு நொடி
ஒரு மூச்சு
ஒரு காதல்
ஒரு சிரிப்பு
ஒரு ஊடல்
அவளுடன்
இதுதான் என் உலகம்

Sunday, February 24, 2008

மனம்

சுவைக்கும் நாக்கு
நுகரும் மூக்கு
அணைக்கும் கரங்கள்
நடக்கும் கால்கள்
பார்க்கும் விழிகள்
கேட்கும் செவிகள்
பேசும் வாய்
யோசிக்கும் மூளை

என்று அனைத்து உறுப்புக்கும்
உருவம் கொடுத்த ஆண்டவன்
மனதுக்கு உருவத்தை கொடுக்கவில்லை
யோசித்தேன் ...........

நாக்கையும் மூக்கும்
வாயையும் விழியையும்
தன் கட்டுக்குள் வைத்து இருக்கும் manam
கடவுளின் நிகர்
எனவே உருவத்தை அழித்துவிட்டான்
உவமையாய் உலவ வைத்தான்

Tuesday, February 19, 2008

உடையதே மனமே

சிதறும் வென்மனிகள்
ஓடுகின்ற திசைகளை
கணிக்க முடியாது
கவனிக்க இயலாது

உடைந்த மனத்தின்
உதிர்ந்த உருவத்தை
உருவாக்க முடியாது
மீண்டும் ஓட்டவைக்க இயலாது

பெருதத ஏமாற்றம்
பேரலையாய் உயர்ந்து வந்து
உறுதி என்னும் சிறுதோனியை
ஓங்கி ஓங்கி அடித்து பார்க்கும்

அலை சீற்றம் அரை நாழி
நுரை மட்டும் கரை மிஞ்சும்
அதன் பின்னே தோணி அது
அழகாய் மீண்டும் மிதந்து ஓடும்
உடைந்தாலும் அது மனம்தான்
உருவம் இழந்தாலும் அது மனம்தான்

உடைந்தததில் உருவாவோம்
உறுதி தோணியில் பயணம் செய்வோம்

ஜன்னல் இருக்கை

இயற்கை உருவாக்கிய
அழகு தொலைகாட்சிபெட்டி

மின்சாரம் தேவை இல்லை
நிலையங்கள் thevai இல்லை
தணிக்கை தேவை இல்லை
கட்டணம் எதுவும் இல்லை

ஓடுகின்ற ஊர்திகளின் உள்ளுக்குள் அமர்ந்து கொண்டு
உலகத்தின் ஓட்டத்தினை உயிரோட்டத்துடன் ரசிக்க வைக்கும்

இருக்கையில் அமர்ந்த பின்னே நம்மை இயற்கில் ஆழ்த்தும்
இந்த இருக்கையின் மடி தாயின் மடி தன்னை நினைவு கூறும்

Monday, February 18, 2008

பேராசை பெரு நஷ்டம்

பேராசை பெரு நஷ்டம்
பெரியவர்கள் சொன்னார்கள்
இல மீசை வளர்ந்த நாளில்
இளம் பெண்கள் அனைவரையும்
தனதாக்கி கொள்ளும் நோக்கில்
தனை மறந்து தததாரியாய்
அவள் எண்ணம் மட்டும் கொண்டு
காதல்தான் பெரிது என்று
குறிக்கோளை தொலைததன்றி
குடும்பத்தின் மகிழ்ச்சி நீக்கி
தெருவோரம் சுவற்றிநினிலே
தினந்தோறும் அமர்ந்திருக்கும்
வருங்கால தூண்களாம்
இளங் காளையர் தம்மை
இரு கண்கள் காணும் புது
இதயத்தில் தோன்றும் கேள்வி
அவர் கூற்று உண்மை தானோ ?

இழக்கின்றேன் உறுதியை

கனவுகள் பலிக்கவில்லை
கண்களில் ஈர முல்லை
நினைவுகள் நிஜத்தில் இல்லை
நெஞ்சினில் ஏனோ தொல்லை

நிஜத்துக்கும் நிழலுக்கும் இன்று
தீராத போட்டி ஒன்று
தினம் தினம் நடந்து கொண்டு
நிம்மதி அழிக்குதென்று
புத்திக்கு தெரிந்த பின்னும்
புரியவில்லை எனக்கு இன்னும்
எத்திக்கில் செல்வேன் நானும்
இழக்கின்றேன் உறுதி திண்ணம்

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...