Wednesday, May 28, 2014

கவலை வரும் பொழுதும் காதல் வரும் பொழுதும்
கவிதை வரும்
முடிவாய் ஒன்றில் சிரிப்பு
ஒன்றில் சிறு நகைப்பு

இரண்டும் துன்பம் இரண்டும் இன்பம்
இதயம் அறியும் நன்றாய்
என் செய்யும் அதனை
இயக்குவது மூளை அல்ல இக் கோழை

விழுந்து எழும் குழந்தையாய்
விளக்கு நோக்கி போகும் வீட்டில் பூச்சியாய்
மனம்
நொடிந்தாலும் அடி விழுந்தாலும்

மீண்டும் தேடும் கவலையை / காதலை
காதணி விழா 

அன்பு மகள் என் மடியில்
அவள் அன்னையவள் என் அருகில்
எம் இருவர் எண்ணமெல்லாம்
எம் குழந்தை இன்னல் எண்ணி
ஆசாரி அருகில் வந்து
அன்பாய் அவள் காதை  தீண்டி
செல்லாமாய் சிரிக்க வைக்க
சில சில செய்கைகள் செய்கின்றார் 

என் மகளோ அவரை கண்டு
அடங்காத அச்சம் கொண்டு
அழுதிடத்தான் ஆரம்பித்தாள்
என்னுள் தனை நுழைத்து ஒளிந்து கொண்டாள்

கதறினாள் என் பெண்ணவள் 
அருகே பதறினாள் என்னவள்
எனக்குள்ளும்  உதறல்தான் இருப்பினும்
எண்ணம் சிதறாமல் நிறுத்தி நின்றேன் 
முடிவிலே தோல்வியுற்றாள் என் பெண்
காதிலே அணியை சேர்த்தார் அவள் கண் முன்

அழுததில் அயர்ந்து போனாள்
கண்கள் அயர்ச்சியில் உறங்கிப்  போனாள்
துவன்டதில் தூங்கும்  என் மழலையை உற்றுப் பார்த்தேன்
ஆதவன் காதல் கொள்ளும்
வெண்மதி வெட்கம் கொள்ளும்
விண்மீன்கள் சூழ்ந்து கொள்ளும்
சிறு ஒளி சிதறலாய் அவள் முகம்
அவள் அழகிற்கு அணி சேர்ப்பது போல்

அழகாய் சிறியதாய் காதணிகள்
பெற்றவளும் உற்றவளும்
உமது உடலின் இரு கை போல் 
ஒரு கையில் வலித்தாலும் அரித்தாலும் 
மறு கைதான் முயல வேண்டும் 
இடையில் உள்ள உடம்பு ஒரு காரணி 

இரு கையும் ஒன்றாகாது 
ஒன்றாயின் அது நன்றாகாது 
கரவொலி எழுப்பத்தான் கைகள் 
அதுபோல் மன வலி கொடுப்பதே உறவுகள் 
வலிகள் உமை பக்குவப் படுத்தும் 
பல உண்மையை உணர்த்தும் 
துவலாதீர் 

மனம் தளராதீர் 
முதியோர் இல்லம்

உயிர் கொடுத்த உன்னதர்கள்
உயிரோடு புதைக்கப்படும் இடம்

உணவு கிடைத்தாலும்
உயிர் இருந்தாலும்
தன் உதிரத்தின் உறவில்லாது
ஊமையான மனத்தோடு
ஈன்ற வயிற்றில் கணத்தோடு
தோலில் சுருக்கங்களோடும் 
மனத்தில்  இறுக்கங்களோடும்
எஞ்சி  நிற்கும் காலத்தினை
வெறும்  கஞ்சிக்காக கழித்திடும்
பிஞ்சு மனம் கொண்ட பெரியவர்களின்
மறைவிடம்

நமக்கு மெருகு ஏற்ற
தம்மை மெழுகாய் உருக்கியவர்கள்

இறுதி நாட்களிலும் எறிந்து கரியாகும் அடுப்பு  

Wednesday, April 10, 2013

என்னபோல உன்னைபோல

வேகாத வெயிலிலே வெள்ளை போட்டுக்கிட்டு
ஒரு கைல சொத்து மூட்டை
ஒரு தோளுல வேலைக்கான சாட்டை (அதான் மடிக்கணினி)
எப்ப பாரு கைபேசியிலே
தொன தொனனு ஒரே பேச்சு
நடுநடுவில் வெளிவருது பாவம் ஒரு பேரு மூச்சு
யாருக்காக வேலை செய்யற தாண்டவகோனே
இப்படி வேலை செஞ்சி என்னத்த கண்ட தாண்டவகோனே
புடிச்ச வேலை கெடைச்சதில்லை அது போவட்டும்
அட புடிச்சதையும் செய்றதில்லை எந்த மகமாரும்
சந்தோஷமா வாழப் பாரு அளவு இல்லாம
சங்கடங்கள் ஓடிப்போகும் உன் முன்னாடி நில்லாம
சட்டை கொலாய மாட்டிப்புட்டா சரியாய் போச்சுதா
இல்ல சாமியாரா போயிட்டாதான் சங்கடம் தீந்துதா
சாமி
சத்தியமா இருந்து பாரு சாந்தம் வந்தாடும்
சாமி கூட முன்னாடி வந்து சடுகுடு ஆடும்



மீண்டும் என் மகளுக்காக

உறங்கும் என் மகளை
உடன் அமர்ந்து
உற்று நோக்குகிறேன்
கனவில்லா அவள் உறக்கம்
அதில் கண் மூடா ஒரு கிறக்கம்
அன்பே நீ வளர்ந்தால்
உன் உறக்கமே கனவாகும்
உன் கனவில் தான் உறக்கம் வரும்
என் கனவே நீ என்றிருப்பேனா
இல்லை உன்னை கனவு காண வைப்பேனா
அறியேன் கண்ணே
என் ஐம்பொன் பெண்ணே

Monday, March 4, 2013

என் மகளின் முதல் ஒலிகள்

என் மகளின் முதல் ஒலிகள்

கேட்டதில் மயங்கின பச்சை கிளிகள்
கிள்ளை மொழி பேசியதில் இப் பிள்ளை
என் சொல்லை சூறையாடியது

சூதறியா சகுனி அவள்
பகடை இல்லா விரல்களினால்
எம்மை பரமபதம் ஆட்டுவிப்பாள்
ஏணி ஏறாமல்
பாம்பில் இறங்கவே மனம் விரும்பும்
அவள் விளையாட்டில் இறுதிவரை இருக்க வேண்டி
இயங்காத கருவிகளும் இசை எழுப்பும் இவள் குரலில்
மயங்காத மனதுகளும் மயங்கிவிடும் இவள் சிரிப்பில்

மண்ணுலகில் வந்துதித்த என் விண்ணுலக தேவதையே
உனை என் கண்களுக்குள் வைத்திருப்பேன்
என் கண்மணியாய் பார்த்திருப்பேன்




Wednesday, November 28, 2012

விபா

என் அழகு தேவதையின்
மீதிருந்து தெறித்த இச் சிறிய மின்மினி
விண்ணைத் தொட எத்தனிக்கும் கை விரல்கள்
இம்மண்ணை துளைக்க முயலும் கால் நகங்கள்
என் கையில் அவள் நீந்தும் நேரம்
உள்ள சுமை எல்லாம் ஓடும் வெகு தூரம்
ஒரு துளி சிரிப்பை அவள் உதிர்க்கையில்
ஒவ்வொரு துகளும் அவளை சுற்றும் உவகையில்
பெண்ணாய் பிறந்து
மண்ணாய் இருந்த இவன் பிறப்பை
பொன்னாய் மாற்றியவள்

Thursday, October 4, 2012

அன்னை என் மனைவி

என் அன்பு மனைவி அன்னை ஆனாள்
அடி வயிற்றில் பிள்ளை ஆடும்
ஆனந்த நடனத்தால்
அலுப்படைந்தாலும்
அழகாக ரசிக்கிறாள்
என்னவளின் பெண்ணழகை
இமைக்காமல் நான் ரசிக்க
என்னவளோ கிள்ளையதன்
இடைவிடாத இயக்கத்தில்
தன்னை மறந்து லயிக்கிறாள்

Thursday, March 29, 2012

அடியல்ல இது என்னுள் வெடி

நிலை மாறி நின்ற நான் 
என் நிழல் மாற உணரவில்லை 
அதற்காய் விலை தந்தேன் 
என் விருப்பங்கள் 
 சிலை வந்ததென் வாழ்வில் 
பின் உலை வைத்ததேன் என் கலையில் 
உணர முயல்கையில் 
உண்மை உறைக்கிறது 
விருப்பங்கள் வீண் இல்லை 
திருப்பங்கள் தான் வாழ்வின் எல்லை 
 மாறும் நிலையும் மலரும் கலையும் 
 உண்மை ஏற்றுகொள் 
உன்னை தேற்றிக்கொள்

Thursday, October 20, 2011

என்ன எழுத ?

இயலாத இதயமும்
இருண்டுள்ள விழிகளும்
சோகமுமாய் கோபமுமாய்
அலைந்திருக்கும் தேகமும்
சூழ்நிலை அறியா சுயநலமும்
வெறுமையும்
வெறுப்பும்
ஒவ்வாமையும்
இங்ஙனம்
உயரதுடிக்காத
ஒன்றுக்கும் உதவாத
ஒரு நோக்கு கொண்டவனின்
விரல் இடுக்கு எழுத்தாணி
எங்கனம் எழுதும்

ஆடாய் கனைக்கும் சிங்கம்

 பல் இல்லா கிழவன் கையில் பல்ப மிட்டாய் கிடைத்து விட்டால்    பல் முளைத்து விடுமாஇல்லை  பல்ப மிட்டாய் கசந்திடுமா    மாடு கட்டா ஏறு கொண்டு மண்ண...