அதிகாலை துயில் எழுந்து
அழகாய் உடை அணிந்து
அமைதியாய் அலுவலகம் போன காலங்கள்
கனவுகளில் மட்டுமே
வேலைப்பளு
குடும்ப சுமை
சுற்றத்தின் சூத்திரங்கள்
சுற்றவைக்கும் சாத்திரங்கள்
அதனால்
நம்மை அறுவடை செய்யும் ஆத்திரங்கள்
கர்மமும் தர்மமும்
நம்மை கவ்வி குதறி
மகிழ்ச்சி நெகிழ்ச்சி
எல்லாம் தூளாய் சிதறி
நாம் உறக்கத்தின் மேல் கூட
இறக்கம் இல்லாத
மன அழுத்தம்
மரண தேவனின் மறு உருவமோ
No comments:
Post a Comment